Monday, December 24, 2007

நிழல் உலகில் வாழும் ஆர்குட் தமிழர்கள்!

தமிழக அரசியல், உலக தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு டுடே, Tamil, இப்படி ஏகப்பட்ட இணையத்தள குழுக்கள். பெரும்பாலான குழு உரிமையாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மேல்நாடுகளில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும் Live வாக, இதற்கு இந்த ஆர்குட் ஒரு தளம், மற்றபடி இதில் விவாதித்து எவரும் தமிழகத்தில் மாறுதல் ஏற்பட ஒரு மன்னையும் செய்ததாக தெரியவில்லை. கலைஞர் இதை சொல்லலாமா? அம்மா அடுத்த ஆட்சியை பிடிக்கமுடியுமா? வைகோ இருக்கிறாரா கானாமல் போய்விட்டாரா? இராமதாஸ் சாதிகட்சி தலைவரா இல்லையா? திருமா சினிமாவில் நடிப்பது சரியா? தமிழீழம் விடுதலை பெருமா? இப்படி கணினி நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிடுமா? இந்த கதையை எல்லாம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் டீ கடைகளில் பேசி தீர்த்து புரட்சி செய்துவிட்டார்கள். இப்போது ஆர்குட் இணையதளத்தில் இதே டீக்கடைதான் நடக்கிறது. நான் உங்கள் கண்டனத்திற்காக கிஞ்சிற்றும் கவலைப்பட போவதில்லை. தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஆர்குட் இளைஞர்கள் இனைந்து இந்த களப்பணியாற்றினோம் இந்த மாறுதலை செய்தோம் என்றால் உண்மையிலேயே பாராட்டலாம். சும்மா பல்லில்லாத கிழங்களைப்போல் வெறும் பேச்சால் என்ன லாபம்? குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சின்னஞ்சிறு கதைகள் பேசி நரை கூடி கிழப்பருவம் எய்தி பின் மாயும் வேடிக்கை மணிதர்களா நீங்கள்? தமிழுக்கும் தமிழர்க்கும் இளையத் தலைமுறையால் உத்வேகமான மற்றாங்கள் தேவை, ஆர்குட் வெறும் சிணிமா போல்தான் செயலில் காட்டுங்கள் மக்கள் சேவையை.

No comments: