Thursday, January 31, 2008

பெரியாரின் கருத்தும் கள்ளக்காதலும்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சரவணன் தனது மணைவி தீபலட்சுமியை ஊருக்கு அனுப்பி வைத்தார். அடுத்த நாண்கு மணி நேரத்திற்கு பிறகு மணைவியின் செல்லுக்கு அழைக்க அழைப்பு போகவில்லை. உறவினர்கள் வீட்டில் தேட அங்கேயும் கானவில்லை, தன் மணைவி அவள் வேலை செய்யும் நிறுவண முதலாளி ஜோதிபிரகாசுடன் இருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மணைவியை மீட்டுக்கொடுக்குமாறு உயர்நீதிமண்றத்தை அனுகி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமண்றம் ஜோதிபிரகாசையும், தீபலட்சுமியையும் ஆஜர்படுத்த சொன்னது. இதையடுத்து ஜோதிபிரகாசும், தீபலட்சுமியும் சென்னை உயர்நீதிமண்றத்தில் ஆஜராக நீதிபதிகள் ஜோதிபிரகாசிடம் நீங்கள் தீபலட்சுமியை கடத்தியதாக அவரது கணவர் குற்றம்சாட்டியிருக்கிறார் அவரது மணைவியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூற 4 மணைவிகளை மணந்த ஜோதிபிரகாஷோ தீபலட்சுமி விரும்பினால் அவரது கணவர் அழைத்து செல்லட்டும் என்று பெருந்தண்மையோடு கூற நீதிபதி தீபலட்சுமியிடம் அவர் உங்களை கடத்தினாரா என்ற கேள்விக்கு இல்லை அவர் என்னை கடத்தவில்லை நானாக விரும்பித்தான் அவருடன் போனேன் என்று கூறிவிட. நீதிபதியோ இந்த வழக்கை இனி விசாரிக்கமுடியாது என்று முடித்துக்கொண்டார். நீதிமண்றத்திலிருந்து வெளியே வந்த ஜோதிபிராகாசிற்கு நான் தான் இரண்டாவது மணைவி என்று புவனா என்ற பெண்ணும் மற்றொரு பெண் நான் மூண்றாவது மணைவி என்றும் வந்து நிற்க, அவர்களும் உண்மையிலேயே இந்த முதலாளியின் மணைவிகளே. ஏற்கனவே ஜோதிபிரகாஷின் முதல் மணைவி தன் கணவர் பல பெண்களை மணந்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்க வீரதீர போலீஸ் படை ஜோதிபிரகாஷை மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். தற்போது 4 பேருக்கும் உதவாத ஜோதிபிரகாஷ் 4 பேரிடமும் சுகம் கானமுடியாமல் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இங்கு தான் பெரியார் சொன்ன திருமணங்கள் ஒழியவேண்டும், ஒருவனின் மணைவி அடுத்தவரை காதலிப்பதை குற்றமாக்ககூடாது என்ற கருத்துக்களை நாம் தெளிவாக கான்கிறோம். பெரியாரின் விருப்பபடியே இங்கு பெண்விடுதலை கிடைத்து தீபலட்சுமி கட்டிய கணவனை கைகழுவி முதலாளியான ஜோதிபிரகாஷை பணத்திற்காக கட்டிப்பிடித்து தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார். கணவனை விட்டு காசுக்காக முதலாளியை மணந்தவளிடம் என்ன யோக்கியதை இருக்கும்? தன் கணவன் துண்புறுத்தியதாகவும், கொடுமைபடுத்தியதாகவும், வரதட்சனை கேட்டதாகவும் வாய் கூசாமல் சிரித்துக்கொண்டே பேட்டிக் கொடுக்கும் இவளுக்கு பேட்டியின் போது எதிரே இருந்து சொல்லிக்கொடுக்கும் வக்கீலை எதில் அடிப்பது என்று தான் புரியவில்லை. ஏற்கனவே மூன்று பேர் இருக்க நாண்காவதாக ஒருவனிடம் பிள்ளை வரம் வாங்கியிருப்பதற்காக துளியும் தீபா வருந்தவில்லை. மாறாக சிரித்துக்கொண்டு நாண்கு மாதமாக தேனிலவு போனதாக கூறுகிறார். சரி ஏற்கனவே ஜோதிபிரகாசிற்கு பிள்ளைகள் பெற்ற முதல் மணைவியை இனி பெரியார் தொண்டர்கள் கைகொடுத்து காப்பாற்றுவார்களா? ஏற்கனவே தீபாவிற்கு இருக்கும் 3 வயது பிள்ளையை அணாதை ஆசிரமத்தில் சேர்ப்பார்களா? இல்லை ஜோதிபிரகாஷை இத்தகைய புரட்சியாளரை விடுதலை செய்ய வலியுருத்தி போராட்டம் நடத்துவார்களா? இல்லை இனி அடுத்து பல ஜோதிபிரகாஷ்களை உறுவாக்க முயற்சிப்பார்களா? பெரியார் சொன்ன கருத்துக்களால் குழந்தைகள் அணாதை ஆசிரமத்திற்கும் பெண்கள் காசுள்ளவனுக்கு நூறாவது தாரமாக கூட போவதற்கும் பல உண்மையான குடும்ப அக்கறையுள்ள பெண்கள் தறுதலைகளை திருமணம் செய்த காரணத்தால் வாழ்விழந்து நிற்கதியாக வாடுவதற்குமே காரணமாக அமையும். இப்படியொரு கீழ்தரமான சமூகத்தை படைக்க நினைத்த பெரியார் என்ன புரட்சியாளர்? குடும்பமும் மனித வாழ்வின் இண்பங்களும் சுகமல்ல காம போதையே சுகம் என்பதை போலத்தான் இருக்கிறது பெரியார் சொல்லும் பாலியல் க்ருத்து. இன்னும் சில மாதங்களில் தீபலட்சுமியும் நடுத்தெருவிற்கு வரும் நிலை வந்தே தீரும். பெண்னுரிமையை நிலைநாட்ட பெரியார் சொன்ன பாலியல் கருத்துக்களால் பெண்கள் மேலும் சீரழிகிறார்கள் என்பதையே இந்த வழக்கு காட்டுகிறது.

No comments: