Wednesday, February 13, 2008

தோழர் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலமறிய ஆவல். தாங்கள் மோடி, ஜெயா வை பற்றி தெரிவித்த கருத்துக்களில் எமக்கு வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் அந்த பார்ப்பனீய சக்திகள் மக்களை பல்வேறு குழுக்களாக மாற்றியிருக்கிறார்கள் மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், கீழ்தரமக்கள், அடிமைகள் என பல குழுக்களாக பிரித்து ஏமாற்றிகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பணியிலும், சமத்துவத்திலும் நாட்டமில்லை, மாறாக பணம், உடலுழைப்பில்லாத சுகவாழ்வு இதை தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மக்களிடம் சமநீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயல்படவேண்டும், ஆனால் அரசு முதலாளித்துவத்தின் பினாமிகளாக இருக்கும் வரை இது சாத்தியமல்ல. நாம் தேர்தலை புறகனித்து ஒரு மக்கள் புரட்சியை நடத்தி மக்களாட்சியை நிறுவ வேண்டும் என்பதில் வேகம் காட்டவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் புரட்சி தீ கனல்விடாத வண்ணம் அரசு அடக்குமுறையை சட்டத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடுகிறது. இதற்கு அஞ்சி மக்கள் இப்படிபட்ட போராட்டங்களில் பங்கெடுப்பதில்லை. ஒன்று மறுக்கமுடியாத உண்மை எந்த போராட்டத்திலும் பெரும்பாண்மையான மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பங்கெடுக்காவிடில் அந்த போராட்டத்தின் முழு பலனையும் அடையமுடியாது. இன்றைக்கு நாடே காலணியாகி வரும் வேளையில், இந்த மக்கள் அடிவருடி வாழ்வு தேட தயாராகிவிட்ட நிலையில் நாம் யாருக்காக போராடுவது? சரி மக்களை மாற்றுவோம் என போராடினாலும் அதற்கு என்ன பலன் இருக்கிறது. இளைஞர்கள் வெறும் கொள்கையற்ற நடைபிண்டங்களாக வாழும் ஊரில்? நானும் சொந்த ஊரில் வாழ்ந்து அதாவது மேட்டூரிலேயே வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அரசு வேலையோ, பொறுத்தமான தனியார் வேலையோ கிடைக்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால் என் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையைவிட குறைவான ஒரு பதவியிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். ஏன் நம்மால் எந்த ஒரு அரசியல்வாதியை காட்டிலும் சிறப்பாகவும், திறமையாகவும், துடிப்பாகவும் செயலாற்றமுடியும், அப்படியிருக்க ஒரு மக்கள் விரோத சுயநல அரசியல் குண்டர்களின் ஆளுமையில் நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதற்கு என்ன மாற்று தோழா? நாம் இருவரும் விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. எந்த தாமதமும் இன்றி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும். 24 மணி நேரமும் ஓயாத அலைகளாக மக்கள் புரட்சியுத்தத்தை நடத்தினால் மட்டுமே நாம் விரும்பும் சனநாயகத்தை ஏற்படுத்தமுடியும். அதுவரை விடியல் இல்லை தோழா, தங்களின் விவாதங்கள் வரவேற்கதக்கதே ஆனால் பெருவாரியான மக்கள் இனைந்து களப்பணியாற்றினால் மட்டுமே நாம் விரும்பும் மாற்றத்தை நிகழ்த்தமுடியும். தற்போதைய சமூக கவலையால் நமக்கு மிஞ்சியது வெறும் சமுதாயத்தின் மீதான கவலையும் அதனால் நம் வாழ்வு மீதான வெறுப்பும், அன்றாட வாழ்வின் இனிமைகள் மீது ஒரு விதமான அலட்சியமும், தனிப்பட்ட வாழ்வில் விரக்தியும் தான். இந்த மன உளச்சல்கள் என்னை இளம் வயதிலிருந்து வெகுவாக பாதித்திருக்கிறது, இதே காரணத்தால் நான் எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் ஒருவித கவலையுடனேயே காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறேன். நமக்கெதிரே விகார வடிவெடுத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனீய மற்றும் முதலாளித்துவ கொடுமைகளுக்குள்ளேயே பலரும் வாழ்ந்து பழகிவிட்டனர். இனி இந்த நிலையை மாற்ற மிக பெரியதொரு நீண்ட புரட்சி யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கும். அப்படியொரு யுத்தத்தை தொடங்கவே நீங்கள் சொல்லும் கால நேரம் வரும் வரை காத்திருக்க எமக்கு பொறுமையில்லை. ஒன்று யுத்ததில் கலந்துகொண்டு போராடவேண்டும் இல்லாவிடில் ஒரு நிம்மதியான வாழ்வையேனும் கண்ணை மூடிக்கொண்டு வாழவேண்டும். அப்படி கண்ணைமூடிக்கொண்டு வாழ்வதால் நிம்மதியிருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்காது ஆனாலும் இந்த வெறுப்பில் இருந்து விடுபடலாம் அல்லவா?

தோழா நீங்கள் தமிழ்மணி என்பவரின் வளைப்பதிவிற்கு எதிர்வினை எழுதமாறு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. உண்மையில் நான் ஒரு கூட்டுடமை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய அதன் பரினாமத்தையும், பல்வேறு நாடுகளில் நடந்த கம்யூனிச புரட்சியை முழுமையாக புரிந்தவனோ அல்ல. அப்படியிருக்க அந்த நபர் கம்யூனிஸ்டுகளை ஏதோ முழுமையாக அறிந்தவனைப்போல உலகின் பல்வேறு மூலைகளில் நடந்த பிரச்சனைகளை எடுத்துரைக்கிறான். அதில் எது உண்மை எவ்வள்வு உண்மை என்பதை நாம் அறியாமல் எதிர்பதிவையோ மறுப்பையோ பதிவு செய்யமுடியாது அல்லவே. குறிப்பாக அந்த விவகாரத்தைப்பற்றி என்ன மறுப்பு கூறாலாம் என்பதைவிட அந்த கூட்டத்திற்கு மக்களை திரட்டி நமது நிலையை வலுவாக எடுத்துக்கூறுவதே வெற்றி. இவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது நம் காலவிரயம் என்பதே எமது கருத்து தோழா.மேலும் நான் இனையத்தளத்தை ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாகவே பார்க்கிறேன், மற்றப்படி உழைக்கும் மக்கள்புரட்சி என்பது இனையதளத்தில் என்ன இருக்கிறது. வளைப்பதிவர்கள் எவ்வளவு பேர் களப்பணியாளர்களாக இருக்கிறார்கள். நீங்கள் வெளியிட்டிருக்கும் போராட்ட அறிவிப்பும் சரி, அதைப்பற்றி தமிழ்மணி என்பவர் எழுப்பியிருக்கும் வினாக்களும் சரி இரண்டுமே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் அப்படியிருக்க அந்த நபரை சட்டை செய்து நாம் எதையும் எழுதிக்கொண்டிருக்க தேவையில்லை. எனக்கு தெரிந்த வரை எந்த இயக்கத்திற்காகவும், கட்சிக்காகவும் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ஒரு பற்றாளனாக என்னைப் போண்றவர்கள் எழுதுவது வெரும் விளம்பரத்திற்காகவும், பாராட்டுதலுக்காகவுமே இருக்கிறது. என்னையே நான் ஒருமுறை நான் எழுதுவதில் எவ்வளவு நடைமுறைபடுத்தியிருக்கிறேன் என்று கேட்டால் மிக குறைவே. அப்படியிருக்க வெற்றுக்கூச்சலால் என்ன பயன் தோழா? செயலில் இறங்கவேண்டும் தோழா, நமக்கு இருக்கும் குடும்ப பற்று சுகவாழ்வை துறந்து மக்களை திரட்ட, போராட, உண்மையான கூட்டுடமை தத்துவத்தை நிலைநிறுத்த நான் என்றுமே தயாராக இருக்கிறேன். நான் ஒரு தனியாளாக போவதைக்காட்டிலும் ஒரு தோழானவது தோழமைக்கு வேண்டும். அந்த தோழமை கிடைக்கும் வரை இப்படி கூச்சல் போட்டுக்கொண்டிருக்க வேண்டியது தான். அந்த தோழமை நீங்களாக இருந்தால் கூட நாம் இப்போதே போராட்டத்தை தொடங்கலாம். சோற்றைப்பற்றி தினமும் கவலைப்பட்டால் எதையும் சாதிக்கமுடியாது. ம.க.இ.க வில் ஒரு உறுப்பினராக இருக்கும் நீங்கள் யாருக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று பார்த்தால் நாம் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது புரியும், இதனாலேயே நான் வசதியாக எந்த இயக்கத்திலும் சேருவதில்லை. குறைந்தபட்சம் அந்த இயக்கங்களின் பேரையாவது கெடுக்காமல் இருக்கலாம் அல்லவா? எனவே நாம் முழுமையான புரட்சியாளனாக மாறினால் தான் மக்கள் புரட்சி பேசுவதிலும் ஒரு நியாயம் இருக்கும்


ம.க.இ.க - பெ.தி.க வேறுபாடுகள்

ம.க.இ.க
1. வரலாற்று ரீதியான தமிழின வீரத்தையும், மற்ற கம்யூனிச புரட்சியின் மகத்துவத்தை பேசுகிறது.
2.முத்லாளித்துவத்தை முழுமையாக எதிர்க்கின்றனர்.
3. நவீனத்துவத்தை மறுத்து எப்போதும் உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே பேசும் வளர்ச்சிக்கு விரோதமாக இருக்கிறது.

பெ.தி.க
1. எப்போதும் பெரியாரை மட்டுமே முன்னிறித்துகிறது, வரலாற்றை புராணப்பண்டங்களாக கருதி முன்னிருத்துவதில்லை.
2. அமெரிக்க விஞ்ஞானத்தையும் அறிவியல், முதலாளித்துவ முன்னேற்றத்தையும் வலியுறுத்தினார்.
3. வெறும் பெரியார் மட்டுமே போதுமா? திராவிடம், திராவிடர் யார்? அது எங்கே இருக்கிறது?
அன்னை

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்,
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்,
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்,
மேவினியில் நான் வாழ செய்தாள்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்,
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்,
ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள்,
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே,
மேண்மையாய் நாம் வாழ செய்திடுவாள்,

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை.

Monday, February 4, 2008

புரிதல், ஒவ்வாமை, சினம்

உலகெங்கும் பல்வேறு இயற்கை பேரழிகள் நடந்து மனித இனத்தை வாட்டியெடுத்து இருக்கிறது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடித்த பல்வேறு அனு ஆயுதங்கள் அப்பாவி மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறது. இதற்கு காரணம் மனித இனம் பொதுவான புரிதல் இல்லாமலும், தனிபட்ட புரிதல்கள் இல்லாமலும், அனுசருனை இல்லாமலும் வாழ்வதலேயே. புரிதல் இல்லாவிட்டால் விலகிவிடலாமே ஒழிய, ஒவ்வாமையை வளர்த்து, சினத்தை வளர்த்து மனித இனத்தை அழிப்பது என்ன நியாயம்? உலகில் நடக்கும் அனைத்து அழிவுகளுக்கும் காரணமே தனிமனித மற்றும் இனங்களின் சினமுமே காரணம். இந்த சினத்தை மனிதன் சிந்தனையாக மாற்றினால் மனித குலம் மாண்புடன் வாழலாம்.
பெரியார் சொன்ன நொண்டி சாக்கு

தமிழர்கள் என்று சொன்னால் ஆரியர்கள் அதாவது பார்ப்பணர்களும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் என்று சொன்னாராம். முதலில் திராவிடர் என்ற சொல்லை உயர்த்தி மேடைக்கு மேடை பேசியது பெரியார் தான். முதலிலேயே தமிழர்-ஆரியர் தமிழர்-பார்ப்பனர் என்று பிரித்து பேச தவறிவிட்டார். ஆரம்பத்தில் இவர் ஆந்திரம், கேரளம், கருநாடகம் இணைந்த மெட்ராஸ் பிரிசிடென்சி என்றிருந்த காரணத்தால் இவர் அனைவரையும் குறிக்கும் ஒரு சொல்லாக திராவிடர் என்ற சொல்லை பார்ப்பணர்களின் எதிர் சொல்லாய் பயன்படுத்தி பிரபலமாக்கிவிட்டார். எனவே பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சி மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இனி திராவிடம் பொய், தமிழ்நாட்டை தவிர்த்து எவரும் பார்ப்பனீயத்திற்கு எதிராக போராட தயாரில்லை என்றதும், சுலபமாக தமிழர்களையே திராவிடர்கள் என்ற முத்திரை குத்தி தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து திராவிடர்களாக்க முயற்சிக்கிறார்கள். இது துரோகமில்லையா? நாம் ஒரு அரசியல் பிழை செய்துவிட்டோமானால் அதையே ஒரு சமூக மக்கள் மீது தினித்து ஒரு வரலாற்று பிழையை செய்வதென்ன நியாயம்? மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதும் திராவிடர் என்ற முழக்கத்தை விடுத்து தமிழர்கள் என்ற முழக்கத்தை வைத்திருக்கவேண்டும். அதுவே நியாயமாக இருந்திருக்கும். அப்படி செய்யாமல் திராவிடர் முத்திரையை தமிழர்கள் தினிக்க அது தற்போது எடுபடாத விசயமாகிவிட்டது.
பேரண்டமும், கோல்களும், மனித இனமும்

இந்த பேரண்டம் என்பது 9 கோல்களை கொண்டதாகவும் பல்லாயிரக்கனக்கான நட்சத்திரங்கள் எனும் நெருப்பு பந்துகளையும் சூரியனையும், நிலாவையும் கொண்டதாக இருக்கிறது. பல்வேறு கோல்களில் பல நிலவும், பல சூரியனும் உடையதாக இருந்தாலும் பூமியை தவிர மற்ற கோலகளில் உயிரினங்கள் வாழ்வதாக உறுதிபடுத்தப்படவில்லை. இந்த பூமி பந்து பல்வேறு காலநிலைகளில் பல்வேறு ரசாயன மாற்றங்களை கண்டு பல லட்சக்கணக்கான உயிரினங்களை கொண்டதாக இருந்தாலும் மனிதனை போல பகுத்தறிவு கொண்ட உயிரி இந்த பேரண்டத்தில் இதுவரை இருப்பதாக கண்டறியபடவில்லை. மனிதனை காட்டிலும் பன்மடங்கு பலமுள்ளதாக இருக்கும் மிருகங்களுக்கு மனிதனை போல பகுத்தறியும் திறன் இல்லை. ஓரளவு ஒவ்வொரு மிருகங்கள் மற்றும் எரும்பு போன்ற ஒரு சில செல்களே கொண்ட உயிரிகள் கூட ஒற்றுமையுடன் வாழ்வதும், கூட்டுடமையாகவும், கட்டுபாடாக வாழ்வதும் பல அறிஞர்களுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. அப்படியிருக்க மனிதன் மனிதனையே ஏமாற்றி வாழ்ந்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயல். பெரியார் மனிதயினத்தின் மேன்மைக்காக வாழ்ந்தவர் வியத்தகு விசயமாகவும் போற்றபடவேண்டிய பின்பற்ற வேண்டிய விசயமாக இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவு வாழ்வில் கண்ணியமும், கட்டுபாடும் இருக்கவேண்டும் என்பது நியாயம் தானே? இவ்வளவு மேம்பட்ட மனிதயினம் நேர்மையின்றி லஞ்சம் வாங்குவதும், மனசாட்சியின்றி கொலை புரிவதும், உண்மைக்கு புறம்பாக பொயுறைப்பதும், கொடுஞ்சினம், தீங்கு செய்தலும், கட்டுபாடற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் மனிதனின் பகுத்தறிவிற்கு அழகா?
WITHDRAWAL TECHNIQUES

என்னைப்போல இ-குமுதம் வாசகர்களுக்கு பாமரன் புதிய மனிதர் தான், ஆனால் பெரியார் சொன்ன கருத்துக்களையும் காலத்திற்கு ஏற்றவாரு நாம் மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுருத்தும் ஒரு தமிழ் பற்றாளராக, தமிழினம், தமிழ்தேசிய சிந்தனையாளர், ஆபாச சீரழிவுகளை எதிர்க்கும் சமூக ஆர்வலர், மனித நேயவாதி என்ற அடிப்படையில் பாமரனை பிடிக்கும். அவரது நையாண்டியான பேச்சு, சில நேரங்களில் சற்று தேவையற்ற ஆபாசமாக பதிப்பகத்தாரால்(அப்படித்தான் பழியப்போடனும்) கூட பதிக்கப்பட்டுவிடுகிறது. கவுன் போட்டுக்கொண்டு காலேஜிக்கு போவேன், பர்முடாஸ் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன் என்று சொன்னது லீனா மணிமேகலையை என்பது லீனா எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அறிவோம். லேனா தமிழ்வாணனன், மணிமேகலை பிரசுரம், லீனா மணிமேகலை இவர்களுக்குள் ஏதாவது உறவா? தெரியவில்லை. லேனா, லீனா கொஞ்சம் இடிக்கிறது. மணிமேகலை இணக்கிறது. புரியவில்லை. தற்போது பாமரன் எனக்கு "சேகுவேரா" வை பற்றி சொன்னதே லீனா மணிமேகலை தான், பெரியார் என எழுத கத்துக்கொடுத்த சிறுமி. என் மணைவிக்கு பெண் பிறந்திருந்தால் அவர் பெயரை வைத்திருப்பேன் என்று லீனாவின் அங்கிள் லாக பாமரன் வெள்ளைக்கொடி காட்டி ஏகத்துக்கு பாச மழை பொழிந்துவிட்டார். அதுமட்டுமா பெயரை சொல்லாவிட்டால் கோபித்துக்கொள்வார் என்று வேறு இனி சம்பவத்தோடு தொடர்புடையவரின் பெயரை எழுதபோவது போல் எழுதியிருக்கிறார். கோழை என்று தன் அங்கிளுக்கு பட்டம் கட்டிய லீனாவும் நானும் ஒரு சோசியலிச
சொந்தக்காரங்க தான் சும்மா குமுதம் பத்திரிக்கை மூலமா விளையாடிகிட்டு இருக்கோம் என்பது போல இருக்கிறது பாமரன் பக்கம். சிறுமியா இருந்தப்போ அடிக்கடி லீனா விடம் கற்றுக்கொண்டது போல் இப்போதும் அவரிடம் அவ்வப்போது பாமரன் பேசியிருக்கவேண்டும். அதைவிடுத்து இப்படி குமுதம் மூலமாக தாக்கினால்? சரி எப்படியோ மீண்டும் பாமரனுக்கு ஒரு நல்ல எழுத்தாளன் துணிவுடன் சம்பந்தபட்ட நபரின் பெயரை குறிப்பிட்டு எழுதவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார் லீனா. இயக்குனர் ஆல்ப்ஸ் தொட்டபெட்டா என்றெல்லாம் ஒரு சிகரத்தையே வெறும் சுண்ணாம்பு கல் என்றவரை ஒரு கோழை என்று சொல்லிவிடமுடியுமா லீனா? உங்கள் பெயரை குறிப்பிடுவதற்கு தயங்கியது அவருக்கு உங்கள் மீது இருக்கும் பாசமும் அன்பும் காரணமாக இருந்திருக்கலாம்.எது எப்படியோ தன் எழுத்துக்கு எழுந்த எதிர்ப்பை சாதுர்யமாக சமாளித்து தன் வருமாணத்திற்கு பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். இருந்தாலும் ஒரு முழுபக்க படம் போட்டு பாமரனை பெருமைபடுத்தினார்கள் அல்லவா? பாமரன் அவர்களே இந்த காலத்துல வீராதிவீரராக இருந்துவிட்டால் மட்டும் இந்த சமூக வாழ்க்கைக்கு போதாது கொஞ்சம் சாதுர்யமாக வாழவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை தங்களின் எழுத்தின் மூலம் புரிந்துகொண்டேன். இதுக்கு பேர் தான் Withdrawal அதாவது நாசுக்காக வாபஸ் வாங்குவது என்று சிலர் கூறுகிறார்கள்.

Thursday, January 31, 2008

பெரியாரின் கருத்தும் கள்ளக்காதலும்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சரவணன் தனது மணைவி தீபலட்சுமியை ஊருக்கு அனுப்பி வைத்தார். அடுத்த நாண்கு மணி நேரத்திற்கு பிறகு மணைவியின் செல்லுக்கு அழைக்க அழைப்பு போகவில்லை. உறவினர்கள் வீட்டில் தேட அங்கேயும் கானவில்லை, தன் மணைவி அவள் வேலை செய்யும் நிறுவண முதலாளி ஜோதிபிரகாசுடன் இருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மணைவியை மீட்டுக்கொடுக்குமாறு உயர்நீதிமண்றத்தை அனுகி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமண்றம் ஜோதிபிரகாசையும், தீபலட்சுமியையும் ஆஜர்படுத்த சொன்னது. இதையடுத்து ஜோதிபிரகாசும், தீபலட்சுமியும் சென்னை உயர்நீதிமண்றத்தில் ஆஜராக நீதிபதிகள் ஜோதிபிரகாசிடம் நீங்கள் தீபலட்சுமியை கடத்தியதாக அவரது கணவர் குற்றம்சாட்டியிருக்கிறார் அவரது மணைவியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூற 4 மணைவிகளை மணந்த ஜோதிபிரகாஷோ தீபலட்சுமி விரும்பினால் அவரது கணவர் அழைத்து செல்லட்டும் என்று பெருந்தண்மையோடு கூற நீதிபதி தீபலட்சுமியிடம் அவர் உங்களை கடத்தினாரா என்ற கேள்விக்கு இல்லை அவர் என்னை கடத்தவில்லை நானாக விரும்பித்தான் அவருடன் போனேன் என்று கூறிவிட. நீதிபதியோ இந்த வழக்கை இனி விசாரிக்கமுடியாது என்று முடித்துக்கொண்டார். நீதிமண்றத்திலிருந்து வெளியே வந்த ஜோதிபிராகாசிற்கு நான் தான் இரண்டாவது மணைவி என்று புவனா என்ற பெண்ணும் மற்றொரு பெண் நான் மூண்றாவது மணைவி என்றும் வந்து நிற்க, அவர்களும் உண்மையிலேயே இந்த முதலாளியின் மணைவிகளே. ஏற்கனவே ஜோதிபிரகாஷின் முதல் மணைவி தன் கணவர் பல பெண்களை மணந்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்க வீரதீர போலீஸ் படை ஜோதிபிரகாஷை மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். தற்போது 4 பேருக்கும் உதவாத ஜோதிபிரகாஷ் 4 பேரிடமும் சுகம் கானமுடியாமல் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இங்கு தான் பெரியார் சொன்ன திருமணங்கள் ஒழியவேண்டும், ஒருவனின் மணைவி அடுத்தவரை காதலிப்பதை குற்றமாக்ககூடாது என்ற கருத்துக்களை நாம் தெளிவாக கான்கிறோம். பெரியாரின் விருப்பபடியே இங்கு பெண்விடுதலை கிடைத்து தீபலட்சுமி கட்டிய கணவனை கைகழுவி முதலாளியான ஜோதிபிரகாஷை பணத்திற்காக கட்டிப்பிடித்து தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார். கணவனை விட்டு காசுக்காக முதலாளியை மணந்தவளிடம் என்ன யோக்கியதை இருக்கும்? தன் கணவன் துண்புறுத்தியதாகவும், கொடுமைபடுத்தியதாகவும், வரதட்சனை கேட்டதாகவும் வாய் கூசாமல் சிரித்துக்கொண்டே பேட்டிக் கொடுக்கும் இவளுக்கு பேட்டியின் போது எதிரே இருந்து சொல்லிக்கொடுக்கும் வக்கீலை எதில் அடிப்பது என்று தான் புரியவில்லை. ஏற்கனவே மூன்று பேர் இருக்க நாண்காவதாக ஒருவனிடம் பிள்ளை வரம் வாங்கியிருப்பதற்காக துளியும் தீபா வருந்தவில்லை. மாறாக சிரித்துக்கொண்டு நாண்கு மாதமாக தேனிலவு போனதாக கூறுகிறார். சரி ஏற்கனவே ஜோதிபிரகாசிற்கு பிள்ளைகள் பெற்ற முதல் மணைவியை இனி பெரியார் தொண்டர்கள் கைகொடுத்து காப்பாற்றுவார்களா? ஏற்கனவே தீபாவிற்கு இருக்கும் 3 வயது பிள்ளையை அணாதை ஆசிரமத்தில் சேர்ப்பார்களா? இல்லை ஜோதிபிரகாஷை இத்தகைய புரட்சியாளரை விடுதலை செய்ய வலியுருத்தி போராட்டம் நடத்துவார்களா? இல்லை இனி அடுத்து பல ஜோதிபிரகாஷ்களை உறுவாக்க முயற்சிப்பார்களா? பெரியார் சொன்ன கருத்துக்களால் குழந்தைகள் அணாதை ஆசிரமத்திற்கும் பெண்கள் காசுள்ளவனுக்கு நூறாவது தாரமாக கூட போவதற்கும் பல உண்மையான குடும்ப அக்கறையுள்ள பெண்கள் தறுதலைகளை திருமணம் செய்த காரணத்தால் வாழ்விழந்து நிற்கதியாக வாடுவதற்குமே காரணமாக அமையும். இப்படியொரு கீழ்தரமான சமூகத்தை படைக்க நினைத்த பெரியார் என்ன புரட்சியாளர்? குடும்பமும் மனித வாழ்வின் இண்பங்களும் சுகமல்ல காம போதையே சுகம் என்பதை போலத்தான் இருக்கிறது பெரியார் சொல்லும் பாலியல் க்ருத்து. இன்னும் சில மாதங்களில் தீபலட்சுமியும் நடுத்தெருவிற்கு வரும் நிலை வந்தே தீரும். பெண்னுரிமையை நிலைநாட்ட பெரியார் சொன்ன பாலியல் கருத்துக்களால் பெண்கள் மேலும் சீரழிகிறார்கள் என்பதையே இந்த வழக்கு காட்டுகிறது.

Wednesday, January 30, 2008

திசை மாறும் திரவிடர் கழகம்

திராவிடர் கழகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது தனி மனித ஒழுக்க கோட்பாடுகளுக்கு எதிராக போராட துவங்கியிருக்கிறது. குஷ்புவிற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க திராவிடர் கழகங்கள் ஆதரவு தெரிவிக்க அதுவரை தமிழ் இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இருந்த நல்லுறவு அறுந்து தொங்க ஆரம்பித்துவிட்டது. பரஸ்பரம் தாக்க ஆரம்பித்துவிட்டனர். ம.க.இ.க வுடன் பெ.தி.க நெருங்க ஆரம்பித்ததிலிருந்து தமிழை தூக்கிபிடித்து தமிழ் தேசிய ஆதரவு பேசி வந்த பெ.தி.க தற்போது தமிழ் தேசிய கருத்தை விடுத்து தேசியத்திற்கு எதிரான ம.க.இ.க வின் தத்துவத்தை தழுவி கொண்டிருக்கிறது. நாடு, மொழி, தேசம் கடந்த நல்லுறவு என்று பெரியார் பேசினாலும் தமிழர் நலனுக்காவே போராடினார், அப்படியிருக்க பெரியார் ஏன் தன் இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயரிட்டார் என்று கேள்வி எழுப்ப, பெரியாரின் நாடு, மொழி, தேச பற்று மறுப்பை மீண்டும் பெ.தி.க தூக்கிபிடித்திருக்கிறது. நாடு, மொழி, தேசம் கடந்த பற்று என்ற பெரியார் மனித நேயத்தை தான் குறிப்பிட்டார் என்றாலும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியார் எடுத்த "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கொள்கையை வலியுருத்தி அதன் அடியொட்டியே இயங்க போவதாக தான் த.பெ.தி.க வின் துவக்க மாநாடு தமிழ்நாடு வரைபடத்திற்குள் பெரியார் இருப்பதை போல மேடையில் படம் வரைந்திருந்தனர். பெரியார் இந்திய தேசப் படத்தை கொளுத்தும் போது கூட தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப் படத்தை கொளுத்துவோம் என்றார், இந்த போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் என்றார். ஆனால் இப்போது தேசியம் தேச பக்தி என்பதையே பெ.தி.க மறுக்கிறது. இந்த என்ன மாயை என்று புரியவில்லை. அந்த மாநாட்டிலேயே கூட கருநாடக த.பெ.தி.க பிரதிநிதிகளாக சிலர் கலந்துகொண்டனர். ஆனால் மேடையில் இருந்த பெரியாரோ தமிழ்நாட்டு வரைபடத்திற்குள் அடைக்கப்பட்டிருந்தார். தேசியமே இல்லை என்ற பெரியார் ஏன் தமிழ்நாடு வரைபடத்திற்குள் அடைக்கப்பட்டார் என்று புரியவில்லை. அதுபோல தமிழ்தேச விடுதலை இயக்கத்தின் மாறனுக்கு பல வகையில் உதவி புரிந்ததாக கொளத்தூர் மணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொளத்தூர் மணியும் பல மேடைகளில் மாறனின் தமிழ் தேசிய கருத்துக்கும் மாறனுக்கும் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். மாறன் போன்றவர்களை ஏன் தேடி பிடித்து கைது செய்கிறார்கள் என்று பல கோணங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஈழமும் தனித்தமிழ்நாடும் அமைந்தால் ஒழிய தமிழர்களுக்கு விடுதலை இல்லை என்று பேசி வந்த திராவிடர் கழகங்கள் தற்போது நழுவிக்கொண்டிருப்பது ஏன்? மாறனோ இந்திய தேசிய இராணுவம் உள்பட மத்திய அரசின் அனைத்து துருப்புகளும் 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தை விடுத்து ஓடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தவர். ஆரம்ப காலங்களில் நக்சல்பாரிகளிடம் பயிற்சி பெற்றவர்களும், அந்த இயக்கங்களின் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவர்களே பின்னர் தமிழ்தேசிய கருத்தமைந்து புலவர் களியபெருமாளின் தலைமையில் இயங்க தமிழ்நாடு விடுதலை இயக்கத்தினர். ஆனால் அதே நக்சல்பாரி இயக்கத்திலிருந்த அ.மார்க்ஸ் தான் தேசியத்தை எதிர்ப்பவர். சில காலம் முன்பு வரை தமிழ்தேசிய கருத்துக்களையும் தலைவர்களையும் ஆதரித்த கொளத்தூர் மணி தற்போது ம.க.இ.க வையும் அ.மார்க்சையும் ஆதரித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் பெ.தி.கவில் தெளிவு இருப்பதாக தெரியவில்லை.
இப்போது அரசியல் கட்சிகளை போல பெரியாரின் திராவிடர் கழகங்களும் எதிரிகளின் அன்றாடம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் லாவணி அரசியல் நடத்த ஆரம்பித்துவிட்டது. குஷ்புவிற்கு அதரவு தெரிவித்ததையே தனக்கு பேச்சுக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்து குஷ்பு ஏதோ தான் ஒட்டு மொத்த இந்தியாவின் பெண்ணுரிமை தேவதை போல போகிற வருகிற இடங்களிலெல்லாம் சிறிதும் பொறுப்பும் நாகரீகமும் அறியாமல் குதித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு புறம் விவரங்கள் இப்படியிருக்க வெகுவேகமாக உலகமயமாகி வருவதால் தேசிய கருத்தே உடைபடும் நிலையில் தான் இருக்கிறது. இனி உலகமே ஒரு தேசம், ஒரே வகையான பணம் என்றாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இனி இந்தியா, அமெரிக்கா, பிருத்தாணியா ருசியா என்றல்லாமல் ஒரே தேசமாகி, சாதி, மதங்களற்ற நாடாக உருவாகும் காலம் இன்னும் சில நூறு ஆண்டுகளில் அமைந்துவிடும். இனி மக்கள் தமிழ்நாடு பாலிடிக்ஸ் பேசமாட்டார்கள் இனி உலகமே ஒரு சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு கல்வியறிவும், செயல்திறமும், ஆதிக்க சக்தியும் உள்ள பணக்காரர்களால் படிப்பறிவற்றவர்கள், ஏழைகள் அடிமைபடுத்தபடுவார்கள். பணத்திற்கு அடிமையாகும் குணம் படித்தவர்களை அடியாக்கும், எனவே பணமும் பண முதலைகளுமே உலகாளும் காலம் வந்தே தீரும். எனவே தேசிய சித்தாந்தத்தை உடைப்பதின் மூலம் அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஆதிக்க சக்திகளின் வேலையை சுலபமாக்கி வருகிறார்கள். பிராந்திய ரீதியான ஒற்றுமை ஆதிக்க சக்திகளையும் இந்திய அரசை எதிர்க்க அதே அளவு பிராந்திய சக்திகளின் கூட்டு சக்தி அவசியம் என்று அவர்கள் கூறலாம். ஆனால் இந்த கருத்து உலகமயம் என்ற கருத்துடன் ஒத்துபோவதானால் இதை சட்டத்தின் தயவில் ஓங்கி நிற்கும் அரசின் அடுக்குமுறைக்கு முன்னால் இயக்கம் நிற்காமல் வெரும் கருத்து நிலைத்து உலகமயத்தின் ஏற்பாட்டிற்கான கருத்தியல் ஒற்றுமையையே காட்டுகிறது. ஒருவேளை உலகமயமாக்கலை இனி தடுக்கமுடியாது என DYFI யை போல பெயரளவில் எதிர்ப்பு காட்டிவிட்டு, உலக அளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை ஈர்க்கும் உறவுகளை ஏற்படுத்தும் திட்டமாக அமைந்தாலும். உலகமயம் என்பதை தடுக்க தேசியமே சிறந்த வழி. ஆனால் தமிழகத்தில் வாழும் பிறமொழி, பிற மாநில இளைஞர்கள் சிலர் பெரியார் என்ற திராவிட குடையை பிடித்துக்கொண்டு வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் அதற்கு வலுவான வார்த்தை திரவிடர் என்பதை முன்னிறுத்தி தமிழ் என்பதையே ஒழித்துக்கட்டி, இங்கே தெலுங்கர்கள் பதுங்க முயற்சிக்கிறார்கள். இப்படி திராவிட கோஷம் எழுப்பும் சிலர் விஜயகாந்த் என்னும் தெலுங்கனின் "தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்" என்பதற்கு என்ன விளக்கம் என்று கூறவேண்டும். விஜயகாந்த்திற்கு தன் கட்சி தேசிய கட்சியா திராவிட கட்சியா என்று கூற துப்பில்லை. ஒன்றும் மட்டும் உறுதி இந்த தெலுங்கர்கள் இந்த விஜயகந்தை ஆதிர்ப்பதின் மூலம் இவர்கள் திராவிடம் பேசுவது தமிழை அழிக்கவும் தமிழ்தேசியம் பேசும் ராமதாஸை எதிர்க்கவும் தான் என்பதை புரியாத கேனையர்களாக தமிழர்கள் இல்லை என்பது உறுதி.

தேசியமே கூடாது என உலகமய கொள்கைக்கு பச்சைக்கொடி பிடிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் எதற்காக பார்ப்பனர்களை மட்டும் தூற்றி பேசவேண்டும்? பார்ப்பனீய குணம் பார்ப்பானிடம் மட்டும் தான் இருக்கிறதா? வேளாளர்களிடம் இல்லையா? முதலியாரிடம், செட்டியாரிடம்
வன்னியரிடம் ஏன் தலித்திடம் இல்லையா. ஒரு தலித் தாசில்தாராய் இருந்தாலும் அவரிடமும் பார்ப்பனீயம் குடிகொண்டுவிடுகிறது. பணம் இருக்கும் பலரும் ஆதிக்க குணம் படைத்த பார்ப்பனீயர்கள் ஆகிவிடுகிறார்கள். நாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் பார்ப்பனர்கள் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் பிற மாநிலத்தவர்களும் தான் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள், வளங்களை சுரண்டி செல்கிறார்கள் அப்படியிருக்க பார்ப்பனர்களை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும். 300 ஆண்டுகளாக இருக்கும் ஆந்திரர்கள் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் பார்ப்பனர்களை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும்? ஏன் துரத்தவேண்டும்? பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், வேதங்களையும் தினித்து நம்மை அடிமைபடுத்தினார்கள் சுரண்டினார்கள் என்றால் இன்று நம் பங்காளிகள் என்று சொல்லும் பல இனத்திலும் ஆதிக்க சக்திகள் இருக்கிறார்கள். அது ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல இனத்திலும் இருக்கிறார்கள், இவர்கள் அனைவருமே சமத்துவம் பேசிக்கொண்டே சொத்துக்குவிப்பர்கள். குண்டர்கள் என்று சொல்லிக்கொண்டே குண்டர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் தானே, இவர்களிடம் இருந்து என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இங்கே ஒரு இனம் தமிழினம் இருக்கிறது, இங்கே வாழ தமிழினத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. ஆந்திரர்களுக்கு வாழ்வாதாரம் ஆந்திராவில் இல்லை என்றால் போராட வேண்டுமே தவிர இங்கே ஓடிவரக்கூடாது. ஈழத்தமிழர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் மொழியாலும், இனத்தாலும் தமிழர்கள் எங்களின் தொப்புள்கொடி உறவுகள். ஆந்திரனோ, கண்ணடனோ, மலையாளியோ அப்படியல்ல, இங்கே எத்தனையோ உழைப்பில்லாமல் சுரண்டி சேர்க்கும் வெளிமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறியே ஆகவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். மனிதநேய பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உழைப்பளிக்காவும் காட்டலாம். ஆனால் அவர்கள் தமிழ் மொழியையே வீட்டுமொழியாக பேசி தமிழ்நாட்டிலேயே வாழ தயாராக இருக்கவேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு உறுதுனையாக இருக்கும் அறிவுஜீவுகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்கு அடைக்கலமும் குடியுரிமையும் கொடுக்கலாம் ஆனால் மேற்குறிப்பிட்ட மொழிக்கொள்கையையும், மேலும் தமிழக குடியுரிமை சட்டத்திட்டத்திற்கு கட்டுபட வேண்டும்.

தற்போது தமிழர்களான முஸ்லிம்களை சிறுபாண்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் வேற்று மாநிலத்தவரை ஆதரிக்கும் ம.க.இ.க வும், தி.கவும் ஆதரித்து இவர்களின் ஆதரவை பெருக்கிகொண்டு வருகிறார்கள். இப்படி திரவிடத்தின் பெயரால் வேற்று மாநிலத்தவர்கள் இங்கே கொடிகட்ட பார்ப்பது தமிழர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க வந்த திராவிடம்

ஒரு சிலர் இப்போது தமிழ் தேசியம் பேசுபவர்களை இவங்க பார்ப்பனீயர்கள் என்று முத்திரை குத்த துவங்கியிருக்கிறார்கள், காரணம் இவர்கள் பேசும் இல்லாத திராவிட தேசியத்தை குறை சொல்வதால் தான். அதையும் மீறி நாம் பேசினால் தேசியமே தவறு முதலாளித்துவம் என்கிறார்கள். தேசியமே பொய் என்றால் எதற்காக திராவிடம் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறீர்கள்? ஆந்திரனும், கண்ணடனும், மலையாளி தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக்கொள்வதில்லை என்கிறீர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளவில்லை என்பதால் நாங்கள் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டுமா? எங்களது தமிழன் என்ற அடையாளத்தை எதற்காக இழக்கவேண்டும். மற்றவர்கள் ஏற்காத திராவிடர் என்ற அடையாளத்தை எங்கள் மீது தினித்து எங்களின் மறைவில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கண்ணடர்களும் வாழ்ந்துகொள்ளத்தான் இந்த ஏற்பாட்டை தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள். அண்டை மாநிலத்தில் திராவிடமும் இல்லை, திராவிடத்தை பேசும் மனிதர்களும் இல்லாத போது தமிழர்களின் அடையாளத்தையும் மொழியையும் அழிக்கவே இந்த திராவிட கழகத்தினர் முயற்சிக்கின்றனர். அதில் ஒரு திட்டமாக தற்போது தமிழர்களையே பார்ப்பனர்களாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இந்த வெளி மாநில கையேந்தி கும்பல். நாங்கள் தட்டேந்தும் பார்ப்பன கும்பலும் அல்ல அடுத்தவரை சுரண்ட வந்த ரஜினி, மார்வாடி கும்பலும் அல்ல. உண்மையில் ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கண்ணடர்களையும் தொங்கும் தி.க கும்பல் மார்வாடிகளை மட்டும் வெறுப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. அதிர்ஷட கற்கள் விற்பதால் என்றால் மற்ற மாநிலத்தவர் மட்டும் யோக்கிதமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியுமா? ஆந்திரர்கள் கூட பெரும்பாலும் விபாச்சாரத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரத்தை ஆதரிப்பதைவிட ஆண்களும் யோக்கியதையாக இருக்கவேண்டும் என்று கூட சொல்லலாமே. இப்படி தமிழ்தேசியம் பேசுபவர்களை பார்ப்பனீயர்கள் என்று பேசி தமிழர்களுக்குள்ளேயே "திராவிட தமிழர்கள்" "பார்ப்பன தமிழர்கள்" என்று பிரிக்கும் முயற்சி நடக்கிறது. இவர்களுக்கு இப்படி ஒரு எடுத்துக்கொடுக்கும் வேலையை தான் "சுப.வீ " செய்கிறார். அதென்ன "திராவிட இயக்க தமிழர் பேரவை" அதாவது திராவிடர் அல்லது பெரியார் கருத்துள்ள தமிழர் பேரவை அல்லது திமுக இயக்கி வைக்கும் தமிழர் பேரவை என்று எடுத்துக்கொள்ளலாம். விஜயகாந்த் வைத்துள்ள பெயரும் இப்படித்தான் தே.மு.தி.க இந்தாளுக்கு பெரியாரின் கருத்துக்களில் பாதிக்கு மேல் நம்பிக்கையில்லை அப்படியிருக்க தே.மு.தி.க ஒரு கவர்ச்சி பெயர் தானே ஒழிய கொள்கை பெயர் அல்ல.
பழ. நெடுமாறன் பாசிச பா.ஜ.க, இந்து முன்னனி, யுடன் கூட்டு சேர்வதோ எவ்வள்வு ஆபத்தோ அதைவிட ஆபத்து இந்த தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சி. எனவே சுப.வீ தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவை என்று ஆரம்பிக்காவிட்டாலும் திமுகவின் எடுபிடி இயக்கமாகவும், கருணாநிதி புகழ்பாடும் இயக்கமாகவும் ஆகிவிட்டது. தமிழர் தேசிய இயக்கம் என்று கூறிவிட்டு தமிழ்தேச விடுதலையை பற்றி பேசவோ போராட்டமோ புரட்சியோ நடத்தாமல் ஈழத்தமிழர் மட்டுமே பேசுவது பயணளிக்காது என்று விமர்சிக்கும் தி.க வினரும் தமிழர் நலன் பேசாமல் தமிழர்களை திராவிடர்களாக்கும் முயற்சி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பை எடுத்துக்கொண்டு தமிழர்கள் இந்திய தேசிய கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு ஒரு கூட்டுடமை தேசியமாக தமிழின் ஆட்சியில் இயங்கி தமிழர் நலனை காப்பதுவே முழுமையான தமிழ்தேசியமாகும். பழ. நெடுமாறன் இங்குள்ள சட்டங்களுக்கு அஞ்சி, மக்கள் பேராட்டத்திற்கு முன் வரமாட்டார்கள் என்று தான் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு பின் தமிழ்தேசிய விடுதலையை அடையலாம் என்று காத்திருக்கிறார், இது ஒரு சாதுர்யம், காத்திருப்பே ஒழிய இயலாமை அல்ல. அதே சமயம் தமிழ்தேசிய விடுதலை முன்னெடுப்பை மேற்கொண்ட புலவர் கலியபெருமாள், மாறன், பின்னர் வீரப்பனையும் ஆதரித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஒரு முதியவர் ஒரு தேசத்தின் விடுதலை போராட்டத்திற்காக துப்பாக்கி தூக்க முடியாது. பிரச்சாரத்தின் மூலம் கருத்துக்களை பரப்பி விழிப்புணர்வு மற்றும் எழுச்சியை மட்டுமே ஊட்டமுடியும். அந்த வகையில் தமிழ்தேசிய கருத்து அனையாமல் இருப்பதற்கு பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே காரணமாக இருக்கிறார். அதனாலேயே அவரை பல தி.க வினர் தாக்கி பேசி வருகிறார்கள், திருமாவளவன், வைகோ, மற்றும் ராமதாஸ் ஆகியோரும் அதே கருத்தில் அரசியல் நடத்துபவர்கள் அதனாலேயே அவர்களையும் அரசியல் கடந்து விமர்சிப்பது பொதுவான விசங்களில் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா? ஆனால் தமிழ் தேசிய கருத்தை உயரப்பிடித்த கொளத்தூர் மணி வீரப்பனின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் தேசிய கருத்திற்கு எதிரான திசையில் திரும்பி திராவிட கருத்தில் தமிழர் நலனையும் பெரியார் கூறிய "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தையும் மறந்தது எப்படி என்பது தான் புரியவில்லை.

தமிழர்களின் வாழ்விலே மூடநம்பிக்கை இருந்தது உண்மை அதுகூட எப்படி பாதி நன்றியுணர்வு, பயம் ஆகியவற்றால் ஏற்பட்டதே வணக்கம் செலுத்தும் முறை. தமிழர்கள் வணக்கம் என்பதற்காகவும், நன்றி சொல்வதற்காகவுமே கைகூப்பியுள்ளனர் அடுத்தபடியாக அச்சத்தை ஏற்படுத்தி கொலை, கொள்ளையை தடுக்க வணங்க்யுள்ளனர். ஆனால் இந்த சொற்ப மூடப்பழக்கத்தை ஒழிக்க தமிழரின் வரலாறு, பண்பாடு இவற்றையே துறக்கவேண்டுமென்றால் என்ன நியாயம்? திராவிடருக்கென்று என்ன கலாச்சாரம் இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது. தமிழன் என்ற சொல் வரலாற்றில் இருந்து நீக்கப்பட்டால் தமிழரின் வரலாறு இல்லை. திராவிடன் என்றால் அவன் இடையில் வந்த பார்பனனுக்கு எதிரான ஒரு இனத்தவன் என்று வரலாற்று பிழை ஏற்படும் வாய்ப்பு தான் அதிகம். தமிழர் தன் அடையாளத்தை இழந்து, பண்பாட்டை இழந்து, வரலாறு அழிந்த கூட்டமாக ஒற்றுமை அற்று திசைக்கு ஒருவறாக அலையவேண்டும் என்பதே திராவிடர் கழகங்களின் நோக்கமாக இருக்கிறது. இவர்களின் உறுத்தல்கள் என்னவென்றால் தமிழ் கலாச்சாரம் என்று கற்பை பாதுகாத்து பெண்களை அடிமை செய்கிறார்கள், வரலாறு என்று சொல்லி கோயிலையும் கோபுரத்தையும் காத்து சாதி, மதங்களை வாழ்வைக்கிறார்கள் என்பது தான். சாதி மதத்தை ஒழித்து மக்களை ஒன்றுபடுத்துவதும் சமத்துவம் கான்பதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் தமிழர்களின் கட்டிட திறமைகளை வெளிப்படுத்தும் கோபுரங்களை சாய்க்க வேண்டியதில்லையே. கற்பு என்ற கட்டுப்பாட்டை ஒழித்து ஆண், பெண் பேதத்தை நீக்குவோம் அதற்காக கட்டுபாடற்ற மேலைநாட்டு கலாச்சாரத்தை ஏன் நாம் தழுவி அழவேண்டும், குடும்ப அமைப்பை சிதைக்க வேண்டும்? நண்மை செய்கிறோம் புரட்சி செய்கிறோம் பேர்வழிகள் என்று இப்படி அழிவுகளில் தமிழையும் ஏன் பாழ்படுத்தியழிக்க வேண்டும்? தமிழர்கென ஒரு குணம் இருக்கிறது, அது தான் மனித நேயம், அதை ஏன் அழிக்கவேண்டும். தமிழ் எனும் இனிய மொழியை ஏன் மேற்கத்திய நாகரீகத்தின் பெயரால் அழித்து ஒழிக்க வேண்டும்?

Tuesday, January 29, 2008

திராவிடம், தமிழ்தேசியம், மார்க்சியம்

தமிழ்தேசியவாதிகளுடன் கைகோர்த்த திராவிட இயக்கத்தினர், தற்போது மார்க்சிய மக்கள் கலை இயக்கிய கழகத்துடன் கைகோர்த்துள்ளனர். அனாதையாக இருந்த இந்து பாசிசவாதிகளுடன் தமிழ்தேசியவாதிகள் கைகோர்த்துள்ளனர். மறைந்திருந்த மாற்றுமுகங்கள் இப்போது வெளிப்பட துவங்கியுள்ளது. உண்மையிலேயே தேசியத்தில் இருக்கும் முதலாளித்துவ முகம் பாசிச பா.ஜ.க வையும், திராவிட இயக்கத்தில் இருக்கும் மார்க்சிய முகம் ம.க.இ.க வாக இயங்கும் மார்க்சியத்துடனும் கைகோர்த்து உள்ளது. இந்த ஒளிந்துகிடக்கும் முகங்களை பலரும் அடையாளம் கானவில்லை, ஆனால் சமுதாயத்தின் அரசியல் பொருளாதார பரினாமம் இந்த முகங்களை தெளிவுபடுத்தியுள்ளது.

திராவிடம் பேசிய பெரியார், மார்க்சியத்தை ஆதரித்த பெரியார் ஏன் தற்போதைக்கு தான் கம்யூனிசத்திற்காக போராட போவதில்லை என்று கூறினார், காரணம் பெரியாருக்கு முதலாளித்துவ அறிவியல் வளர்ச்சி அறியாமையை விரட்ட தேவை என்றும், தனிமனித வளர்ச்சிக்கும் தேவை என்பதால்தான். அப்போதே ஜீவா, சிங்காரவேலர் போன்றவர்களுக்கு முரன்பாடு ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது மார்க்சியவாதிகள் பெரியாரை தழுவ காரணம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதால் தான். ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள் தமிழ்தேசியத்தை பின்னுக்கு தள்ளி மார்க்சியத்தை தழுவிக்கொண்டுள்ளது. கம்யூனிசத்தை தழுவினால் அறிவியல் வளர்ச்சியை கானமுடியாது என்பதை சார். ஏ.டி. பண்ணீர்செல்வம் அந்த காலத்திலேயே பெரியாரை எச்சரித்திருக்கிறார். ஆனால் இன்று திராவிட இயக்கங்கள் அதை மறந்துபோனது.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் மார்க்சிய கட்சி பார்ப்பனர்கள் நிறைந்த காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு தன் மார்க்சிய முகத்தை காப்பாற்றிகொள்ள அவ்வப்போது காங்கிரசை மிரட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரசோ மோடிக்கு காமராசர் அரங்கத்தை வாடகைக்கு விட்டு காங்கிரசே பார்ப்பனர்களின் வீடுதான் என்று காட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மார்க்சியவாதிகள் பெரியாரை தாங்குவதற்கு காரனம் பெரியார் தான் இங்கு தமிழகத்தின் தந்தையாக மதிக்கப்படுபவர், ஆனால் அவர் போராடியது மார்க்சியத்திற்காகவோ அல்லது தமிழ்தேசியத்திற்காகவோ அல்ல, மனிதநேயத்திற்காக.

தேசியத்தில் மனிதநேயம் இருக்காது என்றும் தேசியம் அடிமைகளை வளர்க்கும் என்று மார்க்சியம் ஒருபோதும் சொல்லவில்லை. மார்க்சியவாதிகள் மார்க்சியத்தையே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை
திராவிடமும் திராவிடரும்

திராவிடர் என்றால் பெரியாரை தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவார், பெரியார் என்னவோ முதலில் மொழி, இன, தேசம் என்ற பேதமில்லாத மனித நேயத்தை தான் விரும்பினார் ஆனால், சமூகச்சூழலும் மக்கள் எண்ணமும் அவரது எண்ணத்தை மாற்றிவிட்டது, அரசின் நெருக்குதலாலும் அவர் மாற்றத்தை தழுவினார் என்று கூட சொல்லலாம். முதலில் திராவிட தேசம் என்று பேசி வந்தார் அதன் காரனமாகவே மொழி, இன, நாடு என்ற பற்று இருக்ககூடாது என்றவர் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேச பட்த்தை கொளுத்தினார். வடநாடு பார்ப்பனர் தேசம் என்ற பொருளில் தான் பெரியார் திராவிடநாடு பற்றியே பேசினார் உன்மையிலேயே திராவிடர்கள் பார்ப்பனர்களால் நசுக்கப்பட்டதை காட்டிலும் வடநாட்டு மக்களே அதிகமாக கலாச்சார ரீதியாக மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் பெரியார் அவர்களை காக்கவோ மாற்றவோ எல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை. அவர் தன் போராட்ட சக்தி அல்லது ஒரு யுத்தி என திராவிட நாட்டைப்பற்றி பேசினார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழகம் தவிர வேறெங்கும் திராவிடன் என்ற உணர்வு இல்லை என்பதை உணர்ந்த பெரியார் தமிழ்நாடு தமிழர் என்று பேசினாலும் திராவிடர் கழகம் என்ற பெயரை தமிழர் கழகம் என்று மாற்றவில்லை. ஆனால் தமிழரை திராவிடர் என்று அழைப்பது வரலாற்று பிழையாக மாறிவிடும், மாற்ற இன்றும்கூட முயற்சி நடக்கிறது. இன்று திராவிடர் கழகங்களுக்கு மக்கள் ஆதரவு என்பதே இல்லை என்று சொல்லலாம், எனவே தற்போது தமிழகத்திற்கு வாழ்வு தேடி வந்த வேற்று மாநிலத்தவர்களின் நல்வாழ்விற்காக பாடுபட ஆரம்பித்துள்ளார்கள். தமிழர்களுக்காக அல்ல. அடிப்படையாக இவர்களுக்கு தமிழ் பற்று இல்லை, வர்க்க ரீதியாக சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களின் உரிமை மீதான பற்று மட்டுமே உள்ளது என்று சொல்லலாம். இதை மார்க்சியம் என்று தான் சொல்லமுடியும். பெரியார் ஆரம்பத்தில் எடுத்த திராவிட நாடு நடைமுறை சாத்தியமல்ல பல்வேறு மொழி பேசிபவரை ஒன்றாக இனைக்கமுடியாது என்றுணர்ந்த பெரியார் தமிழ்தேசியம் பேசினார். தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்த பெரியார் தெலுங்கு தேசம் கூறி போராட போகாமைக்கு காரணம் அங்கு இவரது கொள்கைகளை ஆரம்பத்திலிருந்தே எடுத்து செல்லவில்லை, அதனால் ஆந்திராவிலோ மற்ற மாநிலத்திலோ இவருக்கு ஆதரவாளர்கள் இல்லை. அதனால் தன் கொள்கையை ஏற்றுக்கொண்ட தமிழகத்தில் தன் திராவிடர் கழத்தை வைத்து "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை வைக்க ஆரம்பித்தார். இது அடிப்படையில் தவறாகும், தான் நம்பிக்கையிழந்த திராவிடத்தின் பெயரில இயக்கம் வைத்துக்கொண்டு தமிழ்தேசியம் பேசியது, இவர் பெரிய தேச கனவில் இருந்து பல்வேறு நெருக்குதலால் குறுகிய தமிழ்தேசியத்திற்கு வந்துவிட்டதை இவர் ஒரு தாழ்வு நிலையாக கருதியிருக்கலாம் அல்லது தன் நம்பிக்கை நசுக்கப்பட்டதை "தமிழர் கழகம்" என்று வைத்தால் எதிரிகள் இந்த பெயர் மாற்றத்தை கையிலெடுத்து கடுமையாக விமர்சிக்ககூடும் என்று அஞ்சியிருக்கலாம். அல்லது திராவிடர் கழகமாக நடத்தினால் பார்ப்பனர்களுக்கு ஒரு எதிர் வார்த்தையாகவும் அச்சமூட்டும் வார்த்தையாகவும் இருக்கும் என்று கருதியிருக்கலாம். ஆனால் தமிழருக்கான அடையாளத்தை திராவிடர் என்ற சொல் உயர்த்தி பிடிக்கவில்லை, இந்த திராவிடர் என்ற சொல்லை ஒரு குடையாக பிடித்துக்கொண்டு சிலர் இங்கு குளிர்காய அமர்ந்துள்ளனர், அவர்களுக்கு இருக்கும் குடையாகவும் தாங்கியாகவும் இருப்பது திராவிட இயக்கங்கள் தான். தேசியம் என்பது பல்வேறு திட்டமிடலுக்கு அவசியமாகிறது. சிலர் தேசியத்தை முதலாளித்துவம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் தேசியம் முதலாளித்துவம் என்றால் திட்டமிடல் முதலாளித்துவம், திட்டமிடலுக்கு அடிப்படையாக இருக்கும் கணக்கு முதலாளித்துவம், பொருளியல் முதலாளித்துவம், அறிவியல் முதலாளித்துவம், மக்களை காக்க அமைக்கப்பட்ட இராணுவமும், அரசாங்கமும் முதலாளித்துவம், இது எல்லாம் ஒரு கட்டுபாடாக அமைகிறது, இந்த கட்டுப்பாடும் முதலாளித்துவம் ஆகிறது, இப்படி மொத்தத்தையும் எதிர்த்தால் நாம் கட்டுப்பாடற்ற வாழ்விற்கு போகும் போது எந்த அடிப்படையில் கூட்டுடமை அமையும்? மீண்டும் மனிதனை ஏய்க்கும் நிலையே நிற்கும். நாம் பேசும் கட்டுப்பாடு பாலியல் ஒழுக்கம் என்ற பொருளில் அல்ல, சமுதாய கட்டுக்கோப்பும் ஆட்சி முறையும். வெறும் அடிப்படை தேவை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய வாழ்வு ஆரம்ப காலகட்டத்தின் உண்மை. ஆனால் மனிதினின் சிந்தனையும் வளர்ச்சியும், பயன்பாடு போக மீதமும் இன்று நம்மை நவீனத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இதை தொடர்ந்து தான் தகவல் தொடர்பு வசதிகளும் உலக அமைப்பின் புரிதலும், மனித நாகரீகமும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது நியாயம் தான், அதற்காக வளர்ச்சியடைந்த மக்கள் பின்னோக்கி செல்லவேண்டும் என்பது சரியாகாது. முன்னேறியவர்கள் மற்றவர்கள் வளரவும் சமத்துவம் ஓங்கவும் உழைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். பெரியார் கம்யூனிசம் பேசினாலும் அமெரிக்க விஞ்ஞானிகளை பற்றி கண்ணாடி வைத்து படித்தார் அல்லவா அது எதற்கு? எனவே தேசியம் என்பது ஒரு கூட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. உலகமே ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்பதே மர்க்சியவாதிகளின் விருப்பம், முதலாள்களின் விருப்பம், முதலாளித்துவத்தின் கை எப்போதும் ஓங்கியே இருப்பதற்கு காரணம் விஞ்ஞானத்தின் விளைபொருள் அவர்களின் உற்பத்தியாகிவிட்டது, அது மார்க்சியவாதிகளின் கைக்கு காலம் கடந்தே வருகிறது. மேலும் மார்க்சியவாதிகள் மனித நேயத்தை விரும்பும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. அதனால் மார்க்சியத்தின் வளர்ச்சி என்பது ஆமை வேகமாகத்தான் இருக்கும், ஜோதிபாசுவே அதற்கான காலம் வெகு தொலைவில் இருக்கிறது என்றும் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு உதவாத பேச்சை பேசுகிறார். தேசியத்தை மறுப்பது முதலாளித்துவத்தை எதிர்க்க ஒரு அதே பாதையில் எதிர்க்க சரியான உத்தியாக இருக்கலாம். ஆனால் பல்வேறு தேசிய இனங்களை இனைப்பது ஒரு மொழியாக இருந்தால் தான் முடியும், அதோடு நிறவெறி என்பது பிறவிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிறவெறியை ஒழிக்கும் வரை மார்க்சியம் என்பது சாத்தியமல்ல. மார்க்சியத்திற்கு பல்வேறு தடைகளும் எதிர்நிலையும் இருக்கிறது.