Monday, December 24, 2007

நிழல் உலகில் வாழும் ஆர்குட் தமிழர்கள்!

தமிழக அரசியல், உலக தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு டுடே, Tamil, இப்படி ஏகப்பட்ட இணையத்தள குழுக்கள். பெரும்பாலான குழு உரிமையாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மேல்நாடுகளில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும் Live வாக, இதற்கு இந்த ஆர்குட் ஒரு தளம், மற்றபடி இதில் விவாதித்து எவரும் தமிழகத்தில் மாறுதல் ஏற்பட ஒரு மன்னையும் செய்ததாக தெரியவில்லை. கலைஞர் இதை சொல்லலாமா? அம்மா அடுத்த ஆட்சியை பிடிக்கமுடியுமா? வைகோ இருக்கிறாரா கானாமல் போய்விட்டாரா? இராமதாஸ் சாதிகட்சி தலைவரா இல்லையா? திருமா சினிமாவில் நடிப்பது சரியா? தமிழீழம் விடுதலை பெருமா? இப்படி கணினி நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிடுமா? இந்த கதையை எல்லாம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் டீ கடைகளில் பேசி தீர்த்து புரட்சி செய்துவிட்டார்கள். இப்போது ஆர்குட் இணையதளத்தில் இதே டீக்கடைதான் நடக்கிறது. நான் உங்கள் கண்டனத்திற்காக கிஞ்சிற்றும் கவலைப்பட போவதில்லை. தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஆர்குட் இளைஞர்கள் இனைந்து இந்த களப்பணியாற்றினோம் இந்த மாறுதலை செய்தோம் என்றால் உண்மையிலேயே பாராட்டலாம். சும்மா பல்லில்லாத கிழங்களைப்போல் வெறும் பேச்சால் என்ன லாபம்? குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சின்னஞ்சிறு கதைகள் பேசி நரை கூடி கிழப்பருவம் எய்தி பின் மாயும் வேடிக்கை மணிதர்களா நீங்கள்? தமிழுக்கும் தமிழர்க்கும் இளையத் தலைமுறையால் உத்வேகமான மற்றாங்கள் தேவை, ஆர்குட் வெறும் சிணிமா போல்தான் செயலில் காட்டுங்கள் மக்கள் சேவையை.

Monday, December 10, 2007

தமிழ்நாட்டின் 2006-2007 மதுபான விற்பனை 4,837 கோடி!

தமிழ்நாட்டின் 2005-2006 மதுபான விற்பனை 3,921 கோடி.2006-2007 க்கான விற்பனை 4,837 கோடி. (நன்றி நக்கீரன்). ஆண்டுக்கு சுமார் 1,000 கோடிக்கு மதுபான விற்பனை அதிகமாகிறது என்றால் தமிழ்நாடு என்னவாகும்? பெரியார் சொன்னாராம் மது விலக்கை அமல்படுத்தினால் உழைப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் என்று (குடியரசை மேற்கோள் காட்டி நாதாரி). இப்போது மது விற்பனை அதிகரித்திருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் உழைப்பாளிகள் அதிகரித்துவிட்டார்கள் போல் தெரிகிறதே! தமிழ்நாட்டுக் குடிமக்களே உன்மையா? உழைப்பாளர்கள் அதிகமானார்களோ இல்லையோ திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து குடிமகன்கள் சாவுதான் அதிகமானது. மேலும் குடித்துவிட்டு வாகணம் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறப்பு எண்ணிக்கை அதிகமாகி உள்ளதோடு வழக்குகளும் அதிகமாகியுள்ளது. குடியினால் பலகுடும்பங்கள் உழைத்தவர்களை இழந்து வாடுகிறது. பெரியார் கள்ளுக்கடையை எதிர்த்து போராடினார் என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் பெரியாரோ பலமுறை திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான குடியரசு ஏட்டிலேயே மதுவிலக்கை எதிர்த்து எழுதியிருக்கிறார் அதைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவதாக சிலர் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு தனிநாடு!

35,000 , 50,000 பேர் வாழக்கூடிய் சிறிய நகரமெல்லாம் நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடிக்கு மேல் வாழும் தமிழ் சமூகத்திற்கு ஒரு நாடு இருக்ககூடாதா? உலகில் உள்ள 192 நாடுகளில் சுமார் 170 நாடுகள் தமிழகத்தைவிட குறைவான மக்கள்த்தொகை கொண்டவையே. 920 பேர் வாழும் வாடிகன் ஒரு நாடு, ஒருகாலத்தில் சூரியன் அஸ்தமிக்காத தேசம் எங்கள் தேசம் என்று மார்தட்டிய பிரித்தாணியவின் இன்றைய மக்கள் தொகையே 6 கோடிதான். பிரித்தாணியா உலக மக்கள்த்தொகையில் 21 வது இடத்தில் உள்ளது, உலகை கொள்ளையடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதலில் தமிழினம் 65 நாடுகளில் பரவி வாழ்கிறது என்று பெருமை பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழனுக்கான ஒரு தனிநாட்டை பெற முயற்சிக்கவேண்டும். நாம் யாரிடமும் கேட்டுப் பெற தேவையில்லை. நமக்கான சுயாட்சி உரிமையை நிலைநாட்டி ஐ.நா விலே நமக்கான இருக்கையை பெற வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும். நாம் ஏன் நாடோடியாக வாழவேண்டும்? நாம் யாருக்கும் அடிமையில்லை என அறிவித்து நமக்கான அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்புகளிலே கவணம் செலுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு கான வேண்டும். அதற்கான திட்டமிடல், செயல்படுதல், போண்ற வேலைகளில் இளைஞர்கள் அனைவரும் பங்கெடுத்து தூங்கி வழியும் இச்சமூகத்தை தூக்கி நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் உடலில் புதிய குருதி பாயவேண்டும். தமிழரெல்லாம் புத்துணர்ச்சி பெற வேண்டும்.
இந்தியதேசிய அரசியல் துரோகம்!

காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் அல்லது தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாகவே தனித்து ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. பல மாநிலங்களில் மாநிலக்கட்சிகளும், பெரும்பாலும் மாநில சுயாட்சி உரிமை கோரிய கட்சிகளுமே ஆட்சியை பிடித்துள்ளது. இந்த போக்கு எதைக் காட்டுகிறது? மக்கள் தேசிய கட்சிகளை நம்பவில்லை இந்திய தேசிய கருத்தை ஏற்வில்லை, தங்கள் மாநில மக்களின் நலன் காக்கும் கட்சிகளையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதைதானே காட்டுகிறது? அதேடு இன்று ஆளும் காங்கிரஸ் பா.ஜ.க வால் தீவிரவாத பட்டம் கட்டப்பட்ட பல பிரிவினைவாத இயக்கங்களோடு இனக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்கு காரணம் மிரட்டாமல் காலைப்பிடித்து காரியம் சாதிப்பதுதான். மேலும் சட்டத்திற்கு பயந்த கொள்கை நீர்த்துபோன சில இயக்கங்களை அரவணைத்துக்கொள்வதும் இவர்களின் சாதுர்யம். வெள்ளையனை எதிர்க்க மக்கள் ஒன்று திரட்டப்பட்டு பின் ஒரே நாடாக்கப்பட்டு ஒரு போலி சமூகம் உருவாக்கப்பட்டது. இது போன்ற கருத்தியல் அடிப்படையற்ற தேசியவாதம் நீண்ட காலம் நிலைக்காது என்பதே இந்திய தேசியவாதிகளுக்கு புரியவில்லை. குறிப்பாக பா.ஜ.க பிரிவினைவாதததை தடுக்கவே பொடா போன்ற கடுமையான சட்டங்களை கொண்டுவந்தது. பிரிவினை கோரிய சில மாநிலக்கட்சிகள் மக்களின் தீர்ப்பிற்கு எதிராக மதவாத, தேசியவாத பா.ஜ.க அரசை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து பொடா போண்ற மக்கள் விரோத சட்டத்தையும் ஆதரித்து மக்கள் செல்வாக்கை இழந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதில் நடுநிலையாக அதாவது Secular என்ற அனைவரையும் அரவனைக்கும் கட்சி, என்று பசுந்தோல் போர்த்திய புலியாக பதுங்குகிறது. சர்வதிகார போக்கை கடைபிடித்த பா.ஜ.க தன்னழிப்பால் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது. போலி கம்யூனிஸ்டுகள் குரங்காட்டிகளாயினர். தன்னாட்சி அதிகாரம் கோரிய தன்மானச் சிங்கங்கள் கொள்கை நீர்த்துப் பூனைகளாய் போனார்கள். அதாவது சுயமரியாதையையும் மக்கள் நலனும் பேசி ஆட்சியை பிடித்த அரசியல் கட்சிகள் மகன், மகள், பேரன், மாமன், மச்சான், மனைவி, கூத்தி இவர்களின் பதவி, பணம், பட்டம் இவற்றிற்காக கொள்கையை அடகு வைத்துவிட்டு தேசிய ஆட்சிக்கு முட்டுகொடுக்க ஆரம்பித்தனர்.

90 களின் ஆரம்பத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்ளைகையை எதிர்த்தனர், எதிர்த்து கடுமையான விமர்சனைங்களை வைத்துவிட்டு பின்னர் பண வரத்தைக்கண்டு அதே தேசிய கட்சிகளுக்கு மக்களை அடகு வைக்க ஆரம்பித்து இன்று ஆசிய அளவில் பணக்காரர்கள் ஆகியுள்ளனர். சிலர் தானும் ஒரு கட்சி என்பதை காப்பாற்றிக்கொள்ளவே மாறி மாறி கூட்டனி அமைத்துள்ளனர். ஆனால் யருமே மக்களின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை. எனவே, தேசிய கட்சிகள் எதிரிகள் என்றால் இவர்களுக்கு துனைப்போகும் மாநில கட்சிகள் மக்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் அடகு வைத்த கோடாரி காம்புகள். இதில் எந்த அரசியல்வாதியோ, அரசியல் கட்சியோ விதிவிலக்கல்ல. இதே காரணத்தினால்தான் நம்மால் எந்த அரசியல் தலைவரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய நிலையில் நாடாளுமண்றத்தில் உள்ள மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை புறக்கனித்தாலே போதும் தேசியம் என்பது எவ்வள்வு பொய் என்பது விளங்கிவிடும். அதாவது மக்களின் தீர்ப்பை நியாயமாக வெளிப்படுத்தினால் இந்திய தேசியம் என்பது பொய்த்து போய்விடும். அதாவது எந்த தேசியக்கட்சியும் பெரும்பாண்மையை நிருபிக்கமுடியாது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த நிலைதான். ஆனால் அரசியல் கட்சிகள் மக்களின் இந்த எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் விரோத போலி அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. முழுமையாக மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்க அரசாக இல்லாததாலேயே இந்திய அரசு மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்களை வெரும் வாக்களிக்கும் பொருளாகவே அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவேதான் புரட்சியியக்கங்கள் தேர்தல் புறக்கணிப்பை பின்பற்றுகின்றனர். அது மட்டுமின்றி வாக்குரிமையுள்ள குடிமக்களில் கிட்டதட்ட 50% பேர் வாக்கள்ப்பதே இல்லை. இந்த பதிவாகாத வாக்குகளை முழுமையாக தற்போதைய தேசிய நடைமுறைக்கு எதிரான வாக்குகளாகத்தான் கருதமுடியும். இப்படி பல வகையில் பார்த்தால் இந்திய அரசும், மாநில அரசுகளும் மக்கள் விரோத அரசுகளே. இனி அரசியல் கட்சிகள் இப்படித்தான் என்று தெரிந்த பிறகு கொஞ்சமேனும் சூடு சொரணையுள்ள மக்களே தங்களுக்கான சுயாட்சியை நிறுவ புரட்சி செய்ய முன்வர வேண்டும். 60 ஆண்டுகளாய் தூங்கியது போதும் உடனே விழி தமிழா!!!
குடும்ப அமைப்பை சிதைக்கும் பெரி-ஆரியம்!

பெரியார் வளர்த்த இயக்கங்களின் வளர்ச்சியை ஒரு கிராப்பில் வரைவோமானால் அதன் வளர்ச்சி என்பது பின்னோக்கி போய்கொண்டிருப்பதை உணரலாம். அதாவது ஒரு இயக்கம் அல்லது நிறுவணம் தனி மணிதன் இவற்றின் வளர்ச்சியை Horizontal and Vertical growth என்ற அளவுகோள்களால் மதிப்பிடலாம். அதாவது பெரியாரின் கருத்துக்களில் சமுதாய மாற்றங்கள் அல்லது வளர்ச்சிக்கேற்ப மாற்றம் என்ன என்பதை x-axis அதாவது horizontal scale லும், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட சமுதாய வளர்ச்சி அல்லது விளைவுகள் என்ன என்பதை y-axis அதாவது vertical scale லும் வரைந்து பார்ப்போமேயானால் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் மாற்றமில்லாமல் அப்படியே இருக்க, சமுதாயம் மேற்கத்திய கலாச்சாரம், உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப புரட்சி போண்ற புரட்சிகளால் பெரியாரின் புரட்சியை ஓரம் கட்டிவிட்டன என்று சொல்லலாம். ஒரு தனி மணிதன் எடுத்த முயற்சிகளெல்லாம் இன்று உன்மையான தொண்டர்கள் மற்றும் உற்சாகமின்மை காரணமாக பெரியாரின் கணவுகள் கணவுகளாகவே தொடர்கின்றன. மாற்றமே நிலையானது எனவே மாற்றங்களை தவிர்க்கமுடியாது என்ற பெரியாரின் எண்ணத்திற்கு மாறாக உலகமயமாக்கல் என்ற சுரண்டல் மாற்றத்தை எதிர்க்க வேண்டிய சூழலுக்கு பெரியார் அமைப்புகள் தள்ளப்பட்டுவிட்டன. இந்து வெறியர்களின் கூச்சல் வெறும் பிள்ளையார் ஊர்வலத்துடன் முடிந்துவிடுகிறதென்றால் அதற்கு பெரியார் அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெண்ணுரிமையில் என்ன முன்னேற்றம் பொருளாதார ரீதியாக சற்று முன்னேற்றம் கண்டிருப்பதை தவிர்த்து? திருமணங்கள் ஒழிய வேண்டும், குடும்பம் என்ற அமைப்பே கூடாது என்பது பெரியாரின் நோக்கம், இதற்கு மிக முக்கிய காரணம் திருமணங்கள் பெண்ணை அடிமைப்படுத்துகிறது, குடும்ப அமைப்பு சுயநலத்தை வளர்க்கிறது என்பதுதான். ஆனால் குடும்ப அமைப்புக்குள்ளேயே சம உரிமையோடு பெண்ணும் ஆணும் இணைந்து வாழமுடியாதா? குடும்பமாக இருப்பவர்கள் தன்னலமின்றி சமுதாயப்பனிகளுக்காக அற்பனிக்கமுடியாதா? தான் இல்லாவிட்டாலும் அரசும் மக்களும் எமது குடும்பத்தை பாதுகாப்பார்கள் என்ற சே குவேராவின் நம்பிக்கை எங்கிருந்து வந்தது. விடுதலைப்புலிகள் இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் அங்கு தன்னலமற்ற அர்ப்பனிப்புக்கு மக்கள் முன்வருகிறார்கள். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்திட அரசு உறுதி செய்தால் தன்னலம் என்பதே இல்லாமல் போகும்.

ஆனால் அரசு அந்த நம்பிக்கையை வழங்கவில்லை. அதற்கு பெரியார் அமைப்புகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறி மாறி அரசுகளுக்கு ஆதரவாக தங்கள் சுயநலத்திற்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் அறிக்கைகள் விட்டவண்ணம் இருக்கிறார்களே ஒழிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் ஏதுமில்லை. அதுமட்டுமல்ல பெரியார் அன்றைக்கே கூறிய சில கருத்துக்களுக்கு மக்கள் எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. அவர் கூறிய கருத்து இதுதான், வருங்காலத்தில் பொலி எருது போண்ற ஒரு ஆணின் உயிரனுக்களை கொண்டு பெண்கள் பிள்ளை பெறுவார்கள் என்று. பெண்கள் கருப்பையை நீக்கிவிடவேண்டும் என்று கூறியவர் இப்படி ஒரு கருத்தை எப்படி கூறுகிறார். மாறாக ஆண்கள் பிள்ளை பெற ஏதாவது வழி சொல்லியிருந்தால் பெண்களுக்கு பாரமாவது மிச்சம். சரி திருமணத்தை ஒழித்துவிட்டு, குடும்பத்தையும் இல்லாமல் செய்துவிட்டு, பிள்ளைகள் பெருவதையும் நிறுத்திவிட்டால் சில காலத்தில் தமிழ்நாட்டில் யார் இருப்பார்? சிலர் கூறுவதைப்போல இனம் மொழிக்கடந்த பெரியாரின் கருத்துக்கள் உலகிற்கே பொருந்துமானால் உலகிலேயே எவரும் இருக்கமாட்டார்கள். சரி இவர் சொல்வதைப்ப்போல் செயற்கை கரு என்றால் எல்லோரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள், ஒரே குடும்ப வழியில் திருமணம் நடக்கும் குடும்பத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறக்காது என்று சொல்கிறார்களே, எதிர்கால சமூகம் எப்படி இருக்கும்? தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விடுபட்டால்தான் தாம் நினைக்கும் மாற்றங்களை கொண்டுவர முடியும் என பெரியார் நம்பினார். அதனால்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், தமிழ்நாடு நீங்கலான இந்திய தேசியப்படத்தை கொளுத்தினார். பெரியார் கூறிய திருமணம், குடும்பம் சம்பந்தமான கருத்துக்களில் எந்த அளவிற்கு பிடிவாதமாக இருந்தார் என்பது கேள்விக்குறியே ஆனால் அரசியல் ரீதியாக தமிழ்நாடு விடுதலையடைய வேண்டும் என்ற கருத்து பெரியாரின் இறுதி காலங்களில் மிக முக்கியமாக இருந்துள்ளது, ஆனால் அதை எவருமே இன்று செயல்படுத்த முன் வரவில்லை. எல்லோரும் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு அஞ்சி அடக்கமாக இருக்கிறார்களோ?
குட்டி ரேவதிக்கு ஒரு குட்டு இல்ல சூடு!

பென்னுரிமை தேவதைக்கு வணக்கம். "முலைகள்"னு ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டு பிரபலமானீங்க. அடுத்ததா "பென்குறி" அல்லது இன்னும் பச்சையாக்கூட ஒரு புத்தகம் எழுதலாம். இப்போ எல்லாம் ஆனுக்கும் பென்னுக்கும் வித்தியாசம் இல்லை அப்புறம் திருமணங்கள் ஒழிய வேண்டும்னு பெரியார் சொன்னதால யாருமே கல்யாணம் பன்னிக்ககூடாது. கல்யாணமே பன்னிக்காம எல்லோரும் விருப்பபட்டவங்களோட செக்ஸ் வச்சிக்கலாம் அப்படின்னு உங்க கொள்கையை தெரு தெருவா முழங்குங்க. அப்புறம் இருந்தாலும் குஷ்புவோட புது கல்யாணத்திட்டமான கட்டிக்கப்போற பொன்னு "கற்பு"ள்ளவளான்னு எந்த ஒரு படிச்சவனும் கேட்கமாட்டான் அப்படி கேட்குறவன் "gentleman" இல்ல அப்படிங்குற கருத்தையும் பலமா ஆதரிச்சு தமிழகம் எல்லாம் பம்பரமா சுழன்று பிரச்சாரம் பன்னுங்க. அப்புறம் பென்னுரிமை இல்லாத "தமிழ் தேசியம்" பயனற்றது பென்னுரிமை கிடைக்கும் வரை இந்தியாவின் குடிமகளா இருந்து குஷ்புக்கு குடை பிடிங்க, முடிஞ்சா காண்டம் வியாபாரம் கூட பன்னுங்க அதுக்கும் "சிலர்" உதவி பன்னுவாங்க. "பனிக்குடம்"னு ஏன் சிற்றிதழ் நடத்துறீங்க பேசாம பனிக்குடம் ஒரு பள்ளிக்கூடமே நடத்துங்க. அங்க குஷ்புவ வச்சி செக்ஸ் கல்வியை குழந்தைங்களுக்கு "பாடமா" வச்சி பலான பலான பாடம் நடத்துங்க, அப்புறம் "காம்புகள்" அப்படின்னு அடுத்த கவிதை தொகுப்பு எழுதுங்க அப்போத்தான் தமிழ்நாடு பயங்கரமா வளரும்.
நீங்க "முலைகள்" புத்தகம் எழுதினா அது ஆபாசம் இல்ல ஆனா அது பெரிசா சிறுசான்னு எவனாவது எழுதினா சொல்லுங்க வெட்டிறலாம் நந்தா ஸ்டைல்ல. சரி விடுங்க நீங்க, இன்னும் சில பென்னுரிமை(?) வாதிங்க எல்லாம் சேர்ந்து சீக்கிரமா காண்டம் வியாபாரத்தை ஆரம்பியுங்க முடிஞ்சா பல விபச்சார மையங்கள ஆரம்பிச்சு அரிப்பெடுத்த ஆன் பென்களை அழைச்சு அவங்க அரிப்ப தீர்த்து வையுங்க அவங்கள "அறிந்தும் அறியாமலும்" இல்லாத "ஞாநி" ஆக்குங்க அப்புறம் பென்னுரிமை வந்துரும், தமிழ்நாட்டை எப்படியும் தனிநாடா ஆக்கிருவாங்க நமக்கெல்லாம் சுய உரிமை கிடைச்சிரும்.
குறிப்பா காண்டம் விற்பனைக்கு ஆதரவு கொடுத்து ஊரெல்லாம் "condem vending machine" வைக்க உத்தரவிட்ட பென் முதலமைச்சரையும், குஷ்புவையும் அழைத்து அதோட முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தையும் ஷீலா ராணி சுங்கத்தையும் கூப்புட்டு ஒரு வேன்ல மெகா சைஸ் காண்டம் ஊதி வச்சு அதுக்கு முன்னால நின்னு சிரிச்சு போஸ் குடுக்க சொல்லுங்க.

"கல்யாணம்"னு ஒன்னு இருந்தா தானே குடும்பம், அதெல்லாம் எதுக்கு நாய் மாதிரி ஒரு ஓரமா ஒதுங்குனமா வேலையை முடிச்சுட்டு அடுத்த நாய தேடினோமான்னு இருக்குறத உட்டுப்புட்டு அப்படியே சனியன் புள்ள பொறந்து தொலச்சாலும் "அம்மா" அனாதை தொட்டில் கட்டி ஆட்டுவாங்க அங்க போட்டுறலாம் ஒருவேளை காண்டத்தையும் மீறி ஏதாவது ஆயிட்டா?? அட அட இதுவல்லவோ பொதுவுடமை?
அப்புறம் சில பென்னுரிமை பேசுற மேதைங்க ஏன் விபச்சாரத்தையே ஒரு தொழிலா அங்கீகரிக்ககூடாது?ன்னு ஒரு கேள்விய கேட்குறாங்க, அதுக்கு ஒரு நியாயம் வேற இவளுக்கு வேண்டியது காசு அவனுக்கு வேண்டியது சுகம்னு ஏதோ ஆனுக்கு மட்டும் சுகம் சொந்தம், பென்னுக்கு சுகமே இல்ல அல்லது சுகம் தேடுறது இல்லங்குற மாதிரி? அப்புறம் விபச்சாரம்ன்னா அது பென்னுக்குத்தான் பொருத்தம் ஆன் காசுக்காக செய்யுறதே இல்லங்குற மாதிரி?, அப்புறம் சிலர் கானாம செஞ்சா விபச்சாரம் விளிப்படையா செஞ்சா அது தொழில்னு?. அட ஏன் ஆனுக்கு வேண்டியது காசு எவளாவது சுகம் தேடுறவ இருப்பா இல்ல? ஏன்னா பெரியார் சொன்ன மாதிரி எல்லாரும் பொலி எருது மாதிரி ஆன்பிள்ளைய தேடி வருவாங்க பிள்ளையும் பெத்துக்குவாங்க இல்ல? சரி அத்த வுடுங்க இப்ப கல்யாணமே இல்லைன்னு ஆயிட்டா அப்புறம் பாய்ஸ் படத்து பாஞ்சாலி சாரி மகாபாரத பாஞ்சாலி மாதிரி ஷிப்ட் கணக்குல படுத்துக்கலாம், இல்ல முடியாதவன் அல்லது தெரியாதவன் அல்லது விரும்பாதவன் அல்லது பயந்தவன் கட்டில மட்டும் ஆட்டிட்டு போயிறலாம், இல்லன்னா ஆரம்பத்திலேயே வந்துட்டா நசுக்கி புடுக்கிட்டே வெளில ஓடிறலாம். எப்படி?
சரி சப்ஜெட்டுக்கு வருவோம். அட ஏலத்துலக்கூட பழைய காலம் மாதிரி தேர்ந்தெடுத்து ஒரு வருஷம் ரெண்டு வருசத்துக்குன்னு வச்சிக்கலாம் எல்லாம் நம்ப சவுகரியம்தானே? சில பிள்ளைகள் பெத்து அதுக்கு யார் அப்பன்னு தெரியாத தரங்கெட்ட நிலையில விடலாம். இல்ல ஒருத்தரோட திருப்தி படாதவங்க பலரோட போய்க்கலாம். இப்படிப்பட்ட பென்னுரிமை மலர்ந்தால்தான் மனித உரிமை நிலைக்கும்னு பெரியார் நம்பினாரா? இது போல அவரு சொன்னதுதான் தாமதம் நம்ம பேத்திங்க எல்லாம் ரொம்ப பிடிவாதமா இருந்து இந்த பலரோட உறவாடுற உரிமையை மீட்டுட்டாங்கன்னா அப்புறமாச்சும் நாங்க தமிழ் தேசியத்துக்காக போராடுவோம். என்ன சொல்றீங்க?

தமிழ்ப்பற்று - மொழியுணர்வா? இன உண்ர்வா?

நான் தமிழ்ப்பற்றாளன் என்று சொல்வது "பேன்சி"யாகிவிட்டது என்கிறார் ஒரு நண்பர். தமிழ்ப்பற்று மொழியுணர்வா? இன உணர்வா? என்றால் இன உணர்வில்லாத மொழியுணர்வு உயிரற்ற உடல்போல என்கின்றனர். சிலர் இன உணர்வு என்பது ஆதிக்க, பாசிச உணர்வு பிற இன மக்களுக்கு எதிரான தமிழ் தேசிய பாசிசம் என்கிறார்கள். ஆனால் நான் தமிழன் என்கிறார்கள். எதிர்தரப்போ வெறும் மொழியின் வளத்தை மட்டும் நேசிப்பது இலக்கியத்தை வளர்க்குமே தவிர தமிழின மக்களின் முன்னேற்றத்திற்கோ இன விடுதலைக்கோ ஒற்றுமைக்கோ உதவாது என்கின்றனர். இன உணர்வு பாசிச கலாச்சார காவல் மனோபாவத்துடன் கூடியது பிறமொழி பேசும் மக்களை நசுக்கும் குணம் என்கிறார் அ.மார்க்ஸ் என்னும் முன்னாள் நக்சல்பாரி. இன்னும் சிலரோ "I am டமிழ் speaking Indian" என்கிறார்கள் புத்தக வாக்கியத்தை மறுப்பதிப்பாக வெளியிட்டு, இதுபோன்ற கருத்தும் மொழியுணர்வும் அடிப்படையில்லாத பற்றாகவே தெரிகிறது. இன்னும் சிலரோ நான் தமிழ் பற்றுள்ள சுதந்திரமான "Western Culture"ஐ ஆதரிக்கிறேன் என்கின்றனர். இவர்களெல்லாம் குழப்புகிறார்கள் தமிழ்நாட்டு பொதுமக்களே, ஏதோ ஒரு கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்க முடியாமல் தவிக்கிறது அல்லது சிந்திக்க மறுக்கிறது அல்லது திரித்து சுயபலன் தேடுகிறது, அல்லது இத்தோடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுகிறது. குறிப்பாக ஒரு கூட்டம் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் பேசாதவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது, இதற்காகவே இந்த திராவிட இயக்கங்களில் சேர்ந்துகொண்டு நாங்களும் தமிழ் பற்றாளர்கள் என்று கதைகட்டிகொண்டு தங்கள் மொழி-இனருக்காக கட்சைகட்டுகிறது. பெரியாரும் அப்படித்தான் நினைத்தாரோ? அதனால்தான் தமிழர் கழகம் என்று வைக்காமல் திராவிடர் கழகம் என்று வைத்தாரோ? திராவிடர் கழகம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தொடங்கப்பட்ட்து என்பது எனக்கும் தெரியும் ஆனால் பிற மாநிலத்தவர்கள் எத்தனை பேர் திராவிட இயக்கத்தில் இருந்தார்கள்? ஆனால் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் திராவிடர் கழகம் பிறமொழி பேசுபவர்களுக்கு புகழிடமாகிவிட்டது. திராவிடர் கழகமும் ஒரு இயக்கமாக இருக்க ஆட்கள் தேவைப்படுகிறதா இல்லையா? பெரியார் தமிழர் மீது அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் தமிழர் கழகம் என்றல்லவா மாற்றியிருக்க வேண்டும். ஊருப்பட்ட வங்கனமும் வெங்காயமும் பேசிய பெரியாருக்கு சமயோசித புத்தியில்லயா? காலம் மாறிய பிறகும் ஏன்யா சுத்தியல் அருவாள் கதிர் அருவாள் ன்னு கம்யூனிஸ்டுகள கேட்ட பெரியாருக்கு யாரும் இதை சொல்லவில்லையா....? இந்த நாத்திகரிடத்துல ஒரு கண்ணா இருக்கனும்னு ஒரு கம்யூனிஸ்டு பாட்டுபாடுதுங்கோ, ஆனா நானும் நாத்திகிதாங்க சாமியோவ்........


பெரியாரின் முட்டாள்தனம் + முரண்பாடுகள்

கள்ளுக்கடையை ஒழிக்கவேண்டும் என்பதற்காக 300, 400 தென்னைமரங்களை வெட்டி சாய்த்து 6 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்தது சாதனையா? ஒரு குற்றமும் செய்யாத தென்னையை வெட்டிய இவர் செயல் உழைப்பு, சிக்கணம், சிந்தனை என இவர் வலியுருத்திய கருத்துக்களையே வெட்டி சாய்த்தது பொல் அல்லவா இருக்கிறது. வேப்பிலை கசக்காமல் போனாலும் போகலாம் ஆனாலும் பார்ப்பானின் ஆதிக்க புத்தி போகாது என்கிறாரே, பார்ப்பனையும் சேர்த்து ஏன் இவர் திருத்தியிருக்ககூடாது. எதிரிகள் இருந்தால்தான் கருத்தா(ஆ)க்கம் செலுத்தமுடியும் என்பதாலா?

மிக விரைவாக பரப்பப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் பெரியார் விரும்பிய கம்யூனிசமோ, சமுதாய விடுதலையோ அடையவே முடியாது. எனவே அரசியல் ரீதியான அனுகுமுறையில் மாற்றமும், நாம் ஒரு கனம் உலக அரசியலை ஒரு முறை ஆராய்ந்து செயல்படவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. பெரியார் ஒரு கட்டத்தில் தான் சமுதாய விடுதலைக்காகவே போராடப்போவதாகவும், தாம் விரும்பிய கம்யூனிச அடிப்படையிலான அரசியல் விடுதலைக்கான முன்னெடுப்பை தற்போதைக்கு மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். இது பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் சிலருக்கு அதிருப்தியாக அமைந்தது. ஆனால் பெரியார் அன்றைக்கு கம்யூனிசத்தை வலியுருத்தி இருந்தால் ஒருவேளை இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என நம்பலாம். ஆனால் பெரியார் கம்யூனிசத்தை கையிலெடுத்தால் தனது விருப்பமான சமுதாய விடுதலை பாதிக்கப்படும் என கருதியிருக்கலாம்.


பெரியாரின் கட்டபஞ்சாய்த்து

இரத்தக்கண்னீர் படத்தில் நடிக்க சம்பளமாக ரூ10000 கேட்டாராம் நடிகர் ராதா, அன்றைக்கு அந்த தொகை அவர் சாதாரனமாக வாங்குவதைவிட பல மடங்கு அதிகமாம். அதையும் முன்கூட்டியே கொடுத்துவிடவேண்டும் என்றாராம் ராதா. ராதா தான் அந்த வேடத்திற்கு பொருத்தமானவர் எனக்கருதிய தயாரிப்பாளர் கேட்டப் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டாராம். படம் எடுக்க ஆரம்பித்த சில காலத்திலேயே ராதா தனக்கு பத்தாயிரம் பத்தாது இருபத்தைந்தாயிரம் வேண்டும் என்றாராம், அதையும் கொடுக்க தயாராயிருந்தாராம் ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் நடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என புரியாத தயாரிப்பாளரை பெரியாரின் பேச்சை ராதா தட்டமாட்டார் என்று கூறி ஒரு தோழர் பெரியாரிடம் அழைத்து சென்றாராம். பெரியரும் விவரத்தை கேட்டுக்கொண்டு நான் ராதாவை நடிக்கச்சொல்கிறேன் ஆனால் அவர் அதிகமாக கேட்ட பதினைந்தாயிரத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்றாராம். அதற்கு ஒப்புகொண்ட தயாரிப்பாளர் பெரியாரிடம் மேலும் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தாயிரமாக கொடுத்தாராம். உடனே ராதாவை அழைத்த பெரியார் பேசியபடி சம்பளம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பது என்ன நியாயம் எந்த பிரச்சனையும் செய்யாமல் குறித்த நேரத்தில் படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டாராம். ராதாவும் மறுத்து பேசாமல் மேலும் பணத்தை பற்றி பேசாமல் இரத்தக்கண்ணீர் படத்தை நடித்து கொடுத்தாராம். பெரியார் செய்தது என்ன கட்டப்பஞ்சாயத்து தானே? இதைதானே திருமாவளவன், கிருஷ்ணசாமி, போண்ற ஆட்களும் செய்கிறார்கள், அவர்களை மட்டும் ஏன் குண்டர் சட்டத்தில் போடுகிறீர்கள், அட அதைத்தானே தளவாய்பாண்டியன், துரைப்பாண்டியன் போண்ற அதிமுக பிணாமிகளும் திருநெல்வேலியில் செய்கிறார்கள். தம்பி படத்தில் வரும் பாண்டியன் அண்ணாச்சியும் கூட, ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்?


மாறிப்பேசும் பெரியார்வாதிகள்!

டி-சர்ட், ஜீன்ஸ் இதெல்லாம் ஒரு துனியா? தமிழர்கள் அணியக்கூடிய உடையா? மரியாதையான தோற்றம் தரக்கூடிய உடைகளா? என்று வினவிய திருவாரூர் தங்கராசு சேர்ந்த பெரியார் கட்சிகாரர்கள் காண்டம் அனிய சொன்ன குஷ்புவிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இப்போது அதே பெரியார்வாதிகள் பெரியார் படத்துடன் கூடிய டி-சர்டுகளை அணிவது சரியா? இது எப்படியிருக்கு?


ஒரு பெண் தன் கணவனல்லாதவன் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாது?

ஒரு பெண் தன் கணவனல்லாதவன் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாது? என்று கூறினாராமே பெரியார்? என்னப்பா இவரு கல்யாணம் கூடாதுங்குறாரு, கட்டிகிட்டாலும் வேற ஆணுடனோ, பெண்ணுடனோ உறவு கொள்வதையும் தண்டிக்ககூடாதுங்குறாரு? இதே பெரியார் சீதையை பஜாரின்னும், சீதைதான் இராவணன் மீது ஆசைகொண்டாள் என்றும் எழுதியிருக்கிறார் தன்னுடைய இராமாயனத்தில். இராமாயணம் பொய், கட்டுக்கதைனு சொன்னவரு எப்படி இப்படி ஒரு புது கதைய சொன்னாரு? இல்ல இராமாயண கதைய புரட்டி இப்படி எழுதனும்னு எழுதுனாரா? புரியலையே. அசிங்கத்த எடுத்து வெளிய போடரோதோட இவர் நிறுத்தியிருக்கலாம், அங்க வெறெதையோ வக்கிற வேலை இவருக்கு எதுக்கு? கல்யாணத்துக்கு பிறகு கூட பிற ஆண்கள் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாதுன்னு சொன்ன பெரியார் சீதையை பஜாரி, வேசி ன்னு ஏன் பட்டம் கட்டனும். அப்போ ஜெயலலிதாவ என்னன்னு சொல்றது? சீதைய பஜாரின்னு சொன்ன பெரியார் கட்சி குஷ்புக்கு குடைபிடிக்கிறது ஏன்? மேல் தட்டு மக்களாலும் செல்வ சீமான்களாலும் தாசியாக்கப்பட்ட பெண்களுக்காக வாழ்வுரிமை மாநாடு நடத்தினாரு சரி குஷ்பு எல்லாம் யாரால தாசியாக்கப்பட்டாளோ தெரியல அல்லது இன்னுமும் நவீன தாசிகள் வாழுனும்னு பெரியார் கட்சி நினைக்குதா? அல்லது தாசிகள் பல சாதிகாரர்களோட பழகறதால சீமாண்கள் சாதிய மறந்து சமுத்துவத்த ஏற்படுத்தமுடியும்னு நம்புதா? செல்வ சீமாண்கள் தாசிகளோட இருக்க வரைக்கும் தான் சாதியும் சுத்தமும் பார்க்கிறது இல்லைன்னு பெரியாரே சொல்லியிருக்காரே! சரி அப்படி என்ன குஷ்பு கஞ்சிக்கு வழியில்லாமலா தாசியானாள். அவ சொத்து சேர்க்கத்தானே இது பெரியார் சொன்ன பொதுவுடமை சமுத்துவ கருத்துக்கு எதிரானதில்லையா? வேசி தொழில் மூலமா கோடீஸ்வரியாகி அரசியல்ல புகுந்து நாட்டையே நாசமாக்கின சம்பவங்கள் நம் கண் முன் தானே நடக்கிறது? இதைத்தானே குஷ்புவையும் வைத்து அதிமுக நடதத முயற்சிக்கிறது. போகும் போக்கைப் பார்த்தால் விசயசாந்தி, சிம்ரன், ரோஜா, குஷ்பு, அசின், நயந்தாரா போன்ற வேசிகள்தான் நாடாள்வார்கள் போல் தெரிகிறது. என் பாவாடைக்குள் தேன் தேடப்பிறந்தவனோ என்ற திரைப்படலை ரசித்துக்கொண்டு இரட்டை அர்த்த வசணங்களை ரசிக்கும் வரை தமிழகத்திற்கு நடிகைகள் தான் ஆட்சியாளார்கள். சத்யராஜ் என்ற தமிழ் (பெயர்)? பற்று நடிகர்தான் குஷ்புவின் பெர்மனெண்ட்...............வக்கில்னு சொல்லவந்தங்க. செறுப்பு பிரச்சனைக்கு கூட அவர் தான் வாறாரு. சரி விசயத்துக்கு வருவோம், நாடு இனம் மொழி பற்று கூடாதுன்னு சொன்ன பெரியார் ஏன் தனித்தமிழ்நாடு கோரினார்? ஏன் தமிழ் இனத்திற்காக மட்டும் பேசினார்? இதற்கெல்லாம் பெரியாரிஸ்டுகள் என்ன பதில் சொல்கிறார்கள்? இன்றைக்கு அதே பெரியார்வாதிகளில் சிலர் தமிழ்தேசியம் சாத்தியமல்ல என்கிறார்கள். சிலர் எதிர்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ்தேசியத்தில் பெண்ணுரிமை இல்லை என்பதுதான். அப்படியானால் பெரியார் தமிழ்தேசியத்தை ஏன் பேசினார்? அதிலேயே சில பெரியார்வாதிகள் கூறுவது தமிழ்தேசியம் அமைந்தால்தான் தான் நினைக்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என நம்பினார் என்பதுதான் அந்த விள்க்கம். ஆனால் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் போலி பெண்ணியவாதிகளுக்கு இது புரியவேண்டுமே!


திருமணங்கள் ஒழியவேண்டுமா? பாலியல் ஒழுக்கம் தேவையா?

திருமணங்கள் ஒழிந்தால்தான் பெண்கள் விடுதலை பெறமுடியும், திருமணம் பெண்ணை கட்டாயமாக விருப்பமில்லாதவனோடு வாழ்வேண்டும் என் நிர்பந்திக்கிறது, திருமணம் என்ற அமைப்பே இந்து மதவாதிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறிய பெரியார் பின்னர் கற்பு என்பதே பெண்ணை அடிமைப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது என்று கூறிய பெரியார் கற்பு என்பதை பின்பற்ற விரும்புவோர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதாக கடைபிடிக்கவேண்டும் என்கிறார். அப்போதும் கற்பு என்பதை பின்பற்ற தயாராய் இருப்பவர்களுக்குதான் கூறுகிறார். கற்பு என்பதை பொது ஒழுக்கமாகவோ, சமுதாய நலன் கருதியோ இதை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. சிலர் பொது ஒழுக்கத்தின் அடிப்படையில் கற்பு என்பதை ஏற்றுக்கொள்வதாக பெரியார் கூறியதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. குஷ்புவின் பேச்சால் ஏற்பட்ட சர்ச்சையில் இத்தகைய கருத்துக்கள் வெளிவந்தன. இதற்கும் மேலே போய் பெரியார் திருமணம் செய்துகொண்டபின் தன் கணவனல்லாத, மணைவியல்லாத மற்றவருடன் காதல் உணர்வு ஏற்படுவதும், காம உணர்வு ஏற்படுவதும், உடலுறவு கொள்வதும் தவறில்லை, நீ என் மணைவி என்பதால் மற்றவருடன் காதல்கொள்ளகூடாது என்பதும் உரிமை மறுப்பு அல்லது இயற்கையான உணர்விற்கு எதிரானது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே பெரியார் பழைய காலத்தில் தெய்வங்களை புகழ்ந்து பாடிய சில புலவர்களை இப்படி விமர்சித்து உள்ளார். தொண்டரடிபொடியாழ்வார் என்ற ஒரு புலவர் தெய்வத்திடம் வணங்கும்போது தன் மீது குறிப்பிட்ட அடுத்தவன் மணைவி ஒருத்திக்கு காதல் வரச் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடினாராம். அதை விமர்சிக்கும் பெரியார் இப்படி சொல்கிறார், தொண்டரடிபொடியன் ங்குற சாமியார் ஒருத்தன் அடுத்தவன் பொண்டாட்டிக்கு என்மேல ஆச வரமாதிரி பன்னு சாமின்னு பாடுறான் என்கிறார். அவன் என்ன வேண்டுதல் வைத்தால் இவருக்கு என்ன? இவர்தான் அடுத்தவன் மணைவி மீது ஆசை கொள்வது தவரில்லை என்கிறாரே? சிலர் கணவனல்லாத ஆண் மீது காதல் வரும் சூழ்நிலையில் திருமண உறவை முறித்துக்கொண்டு பிரிந்துவிடவேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற சர்சையான உறவை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் உறவை முறித்துக்கொள்ளுதல் நடைமுறை சாத்தியம். ஆனால் ஒரு ஆணோ, பெண்ணோ சமுதாயத்தின் தூற்றலுக்கு அஞ்சி, பொருளாதார பிரச்சனைகள், குடும்ப சூழ்நிலைக்கு அஞ்சி தனது Extra Marital affairயை மறைத்தாலும் மணசாட்சிக்கு விரோதமாக வாழ நேரிடும். இதனால் தான் நாங்கள் திருமணமே செய்துகொள்வதில்லை என்கின்றனர் சிலர். யாரும் யாரையும் அடிமைபடுத்தவும் தேவையும் இல்லை, சோற்றுக்காக செக்ஸ், காசுக்காக காதல், பணக்காரனுக்குத்தான் பெண் கொடுப்பேன் என்ற மாமா வேலை, வரதட்சனை கொடுத்தால்தான் கல்யாணம் என்ற கல்யாண வியாபாரம், காதல் வியாபாரம் நாங்கள் செய்வதில்லை என்கின்றனர் இந்த திருமண எதிர்ப்பாளர்கள். விருப்பபட்டவர்களோடு சேர்ந்து வாழ தாலி என்ற வேலி எதற்கு ஒத்துவரும் வரை வாழலாம் ஒத்துபோகாவிட்டால் பிரிந்து போகலாம், எனவே Living Together தான் இருவரின் உரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என்கிறார்கள் சிலர். சில்க் சுமிதா கூட இப்படித்தான் வாழ்ந்தார் பிறகு தற்கொலை செய்துகொண்டார் என்று சிலர் போட்டு தாக்குகின்றனர். அரசியல் அரங்கில் இந்த விவாதம் தேவையா என ஆர்க்கூட் நண்பர்கள் கேட்கலாம். இந்த விவாதம் நேரடியாக அரசியல் சம்பந்தப்பட்டதல்ல என்றாலும், ஆரோக்கியமான சமுதாய அமைப்பிற்கு இந்த விவாதம் அவசியமாகிறது.

ஒருவரை திருமணம் செய்துகொண்டு நான் விருப்பப்பட்டவரோடு காதல்கொள்வேன் என்பது எந்த வகையிலும் யோக்கியதையல்ல என்பவர்கள் இந்த உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரிஜினல் கணவனோ, மணைவியோ நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்தால் Adultry என்ற வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆப்பு வைக்கின்றனர் வழக்கிற்காக வாடும் சிலர். வேறொருவருடன் உறவு கொண்டதற்காக 7 வருட தண்டனையா இதென்ன கொலை குற்றமா என்கிறது வேண்டப்பட்ட கூட்டம். இதையெல்லாம் நிரூபிக்கிறது கஷ்டம் அதனாலதான் மறைமுகமாக இப்படி அதிகமா நட்க்குது என்கிறது ஒரு கூட்டம். இது விபச்சாரத்தைவிட மோசமானது என்கிறது பென் ஏன் அடிமையானாள்? குழுமம். ஆனால் விருப்பத்தோடு சப்-இன்சுடன் உடலுறவுகொண்ட ஏட்டு மணைவி, ஏட்டு வீட்டைப்பூட்டிவிட்டு சேலம் கண்கானிப்பாளராக இருந்த பொன்மாணிக்கவேலுவுக்கு தகவல் கொடுக்க, ஏட்டு மணைவி என்னை சப்-இன்ஸ் பலவந்தமாக கற்பழித்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தாளாம். இதுவரை சப்-இன்சுக்கு மாமூல் வசூலித்துக்கொடுத்து தன் மணைவியையே கூட்டிக்கொடுத்து மாமா வேலைப் பார்த்த ஏட்டுக்கும் சப்-இன்சுக்கும் என்ன பிரச்சனையோ, இப்போது கம்பி எண்ணப்போவது சப்ஸ் தான். இதுதான் பங்காளி வீட்டை உறவாடி கெடு என்பதா? மனித உரிமை மாநாட்டிற்கு வந்த தென்னாப்பிரிக்க பெண் நிருபர் அதே நாட்டிலிருந்து வந்த உயர்நீதிமண்ற நீதிபதியுடன் 5 நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே மும்பை காவல் நிலையம் ஒண்றில் கற்பழிப்பு புகார் கொடுக்க நிருபரை பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு நீதிபதியை சிறைக்கு அனுப்பியது காவல்துறை. நீதிபதியிடம் என்ன விவகாரமோ தெரியவில்லை பின்னர் நிருபரே வழக்கை திரும்ப பெற்றார். இப்படி Free Sexற்கு குரல் கொடுப்பவர்கள் கூட சிவகாசி செயலட்சுமி விவகாரத்தில் காவல்துறைக்கு எதிராக சரவெடியாய் வெடித்தார்கள். பிறர் மனை நோக்கா பேராண்மை(பேராண்மை என்றால் என்ன?) வேண்டும் என்ற வள்ளுவர் வழியில் வாழும் தமிழினம் ஒழுக்கமற்ற கலாச்சார சீரழிவிற்கு துனைப்போவதா என்பவர்கள் சொல்லவேண்டும், பெண்கள் பிற ஆண்களை நோக்கலாமா என்று? ஒருவேளை பெண்கள்(மார்டன் கேர்ல்ஸ் உங்களை அல்ல பழையகாலத்து பெண்களை) அப்படி செய்வதில்லை என்று வள்ளுவர் நினைத்திருக்கலாம். அப்படியானால் திருமணமானவர் பிறர்மனை நோக்காமல் கண்ணிப்பெண்களை பார்க்கலாமா? திருமணம் இல்லாமல் விருப்பப்பட்டவரோடு உடலுறவு கொள்ளலாம் குடும்ப வாழ்வு என்பதெல்லாம் அவரவர் விருப்பம் என்பவர்கள் இந்த சுதந்திரமே ஒரு சோசியலிச சமுதாயத்தை நிறுவும் அல்லது உருவாக்கும் என நம்புகின்றனர். சோசியலிசத்தை விரும்பும் தமிழ் உணர்வாளர்களோ இந்த பொறுப்பற்ற கட்டுபாடற்ற உல்லாச வாழ்வு அநாகரீக ஒழுங்கீன சமுதாயத்தை ஏற்படுத்துவதோடு தமிழருக்கான அடையாளத்தை சிதைக்கும் என்று கருதுகின்றனர்.



பெரியார் ஒரு வாழ்க்கை நெறியா?

பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்றொர் புத்தகம். ஆனால் மனம்போன போக்கில் பாலுறவு, திருமணமல்லாத வாழ்க்கை முறை. பிள்ளை வளர்ப்பிற்காக பெற்றோர் வாழ்க்கை சுகங்களை இழக்ககூடாது போன்ற எண்ணற்ற குடும்ப அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு வாழ்க்கை நெறியா? ஏதோ வயித்த கட்டி வாயக்கட்டி பெற்றோர்கள் படிக்க வைத்த காரணத்தால் தான் பார்ப்பணர்களை வியக்க வைக்கும் அளவிற்கு பல தலைவர்களும், திறமைசாலிகளும் கிரமத்திலிருந்தும் வந்துள்ளனர். பெரியார் பொதுவுடமை, சோசியலிச சமுதாயத்தை விரும்பினார் நேர்மையான, ஊழலற்ற பொது வாழ்வை ஊக்கப்படுத்தவும், அறியாமையை நீக்கி, ஆதிக்கத்தை எதிர்த்து, உரிமைகளை மீட்க புறப்பட்ட ஓர் புரட்சியாளர் தான் பெரியார். ஆனால் கடவுளைப்போல, மதத்தைப்போல, சடங்குகளைப்போல குடும்பத்தையும் ஓர் மூடநம்பிக்கையாக பெரியார் கருதிவிட்டார் போல் தெரிகிறது. சமுதாயத்தைப்போல குடும்ப அமைப்பிலும் உரிமை பிரச்சனைகள், அறியாமை இருப்பதென்னவோ உண்மையானாலும், இந்த சிக்கலை அனுகும் முறையிலே மாற்றம் தேவை. அன்று குடும்பத்தில் நிலவிய நேர்மையும், அன்பும், அக்கறையும் குறைய என்ன காரணம்? சமுதாய மாற்றம் பின்னோக்கி போகிறது அதிகபடியான ஊழல், சுயநலத்திற்காக அரசியல் என பொதுவாழ்வு சீர்கெட்டுபோகிறதே ஏன் இந்த நிலை? குடும்ப கட்டுபாடுகள் உடைக்கப்பட்டு அறிவார்ந்த சமூகம் தனி மனித வளர்ச்சி குடும்ப அமைப்பை கேள்விக்குறியாக்கி இளைய சமுதாயம் வழி தவறிப்போகும் அபாயம் பெருகி வருகிறது. பொலியான கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு இளைய சமுதாயத்தின் அறிவும் வளர்ச்சியும் சீரழிக்கப்படுவதற்கு காரணம் பெற்றோர்-பிள்ளைகள் புரிதல் இல்லாமையும், பொழுதுபோக்கு அம்சங்களின் படையெடுப்பும்தான். இதை சரிபடுத்த இன்னொரு பெரியார்தான் வரவேண்டுமா? பெரியார்வாதிகள் என்ன செய்கிறார்கள்? பெரியார் சொத்தில் சுகமாக வாழ்ந்து, இயக்க பணத்தில் இன்னோவா கார் வைத்துக்கொண்டு, மானமிகு, தமிழர் தலைவர் என்று அடைமொழிகளை சேர்த்துக்கொண்டும், வெளிநாடுகளில் பட்டம் வாங்கிகொண்டும் சுகமாக கார் ஏறி மெமோரியல் ஹால் சென்று தனது ஜால்றாக்களில் பத்து பேரை வைத்துக்கொண்டு வாரமொரு போராட்டம் நடத்திவிட்டு திடலிலேயே குந்திகொண்டு வரவு செலவு கணக்கு பர்ப்பதும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதும் தானே? அட வாழும் பெரியார் தானே இந்த பொழுதுபோக்கு பிதற்றல்களின் அதிபதியே. இவரை ஒழியுங்கள் முதலில், நடிகைகளின் அரைகுறை ஆட்டம் பார்ப்பது, மக்களுக்கு டிவி கொடுப்பது, சன் டிவிக்கு எதிராக கலைஞர் டிவி ஆரம்பித்து, திருவாளர் திருமதிக்கு எதிராக அங்கே ஒரு ஆட்டம், அங்கே நடக்கும் எதர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் போட்டிபோட்டுக்கொண்டு சமூகத்தை சீரழிப்பவர்களா பெரியாரிஸ்டுகள்?

பெரியாரின் கருத்துக்கள் மீது மீண்டும் ஒரு விவாதம் தேவை, இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாரு பெரியாரின் கருத்துக்களை மாற்றியமைத்து நாளைய சந்ததிக்கு நல்வழி காட்டினால் ஒழிய பெரியாரின் கருத்துக்கள் நிலைக்காது. பெரியாரின் மூலப்ப்டிவத்தில் கைவைக்காமல் புதியதோர் புத்தகத்தை இன்றைய சமுதாயத்திற்கு ஒர் வாழ்க்கை நெறியை வகுக்கவேண்டும்.