Monday, February 4, 2008

பேரண்டமும், கோல்களும், மனித இனமும்

இந்த பேரண்டம் என்பது 9 கோல்களை கொண்டதாகவும் பல்லாயிரக்கனக்கான நட்சத்திரங்கள் எனும் நெருப்பு பந்துகளையும் சூரியனையும், நிலாவையும் கொண்டதாக இருக்கிறது. பல்வேறு கோல்களில் பல நிலவும், பல சூரியனும் உடையதாக இருந்தாலும் பூமியை தவிர மற்ற கோலகளில் உயிரினங்கள் வாழ்வதாக உறுதிபடுத்தப்படவில்லை. இந்த பூமி பந்து பல்வேறு காலநிலைகளில் பல்வேறு ரசாயன மாற்றங்களை கண்டு பல லட்சக்கணக்கான உயிரினங்களை கொண்டதாக இருந்தாலும் மனிதனை போல பகுத்தறிவு கொண்ட உயிரி இந்த பேரண்டத்தில் இதுவரை இருப்பதாக கண்டறியபடவில்லை. மனிதனை காட்டிலும் பன்மடங்கு பலமுள்ளதாக இருக்கும் மிருகங்களுக்கு மனிதனை போல பகுத்தறியும் திறன் இல்லை. ஓரளவு ஒவ்வொரு மிருகங்கள் மற்றும் எரும்பு போன்ற ஒரு சில செல்களே கொண்ட உயிரிகள் கூட ஒற்றுமையுடன் வாழ்வதும், கூட்டுடமையாகவும், கட்டுபாடாக வாழ்வதும் பல அறிஞர்களுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. அப்படியிருக்க மனிதன் மனிதனையே ஏமாற்றி வாழ்ந்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயல். பெரியார் மனிதயினத்தின் மேன்மைக்காக வாழ்ந்தவர் வியத்தகு விசயமாகவும் போற்றபடவேண்டிய பின்பற்ற வேண்டிய விசயமாக இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவு வாழ்வில் கண்ணியமும், கட்டுபாடும் இருக்கவேண்டும் என்பது நியாயம் தானே? இவ்வளவு மேம்பட்ட மனிதயினம் நேர்மையின்றி லஞ்சம் வாங்குவதும், மனசாட்சியின்றி கொலை புரிவதும், உண்மைக்கு புறம்பாக பொயுறைப்பதும், கொடுஞ்சினம், தீங்கு செய்தலும், கட்டுபாடற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் மனிதனின் பகுத்தறிவிற்கு அழகா?

No comments: