Monday, February 4, 2008

புரிதல், ஒவ்வாமை, சினம்

உலகெங்கும் பல்வேறு இயற்கை பேரழிகள் நடந்து மனித இனத்தை வாட்டியெடுத்து இருக்கிறது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடித்த பல்வேறு அனு ஆயுதங்கள் அப்பாவி மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறது. இதற்கு காரணம் மனித இனம் பொதுவான புரிதல் இல்லாமலும், தனிபட்ட புரிதல்கள் இல்லாமலும், அனுசருனை இல்லாமலும் வாழ்வதலேயே. புரிதல் இல்லாவிட்டால் விலகிவிடலாமே ஒழிய, ஒவ்வாமையை வளர்த்து, சினத்தை வளர்த்து மனித இனத்தை அழிப்பது என்ன நியாயம்? உலகில் நடக்கும் அனைத்து அழிவுகளுக்கும் காரணமே தனிமனித மற்றும் இனங்களின் சினமுமே காரணம். இந்த சினத்தை மனிதன் சிந்தனையாக மாற்றினால் மனித குலம் மாண்புடன் வாழலாம்.

No comments: