Wednesday, February 13, 2008

அன்னை

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்,
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்,
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்,
மேவினியில் நான் வாழ செய்தாள்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே,
நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்,
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை,
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்,
ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள்,
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே,
மேண்மையாய் நாம் வாழ செய்திடுவாள்,

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை.

No comments: