Monday, December 10, 2007

தமிழ்ப்பற்று - மொழியுணர்வா? இன உண்ர்வா?

நான் தமிழ்ப்பற்றாளன் என்று சொல்வது "பேன்சி"யாகிவிட்டது என்கிறார் ஒரு நண்பர். தமிழ்ப்பற்று மொழியுணர்வா? இன உணர்வா? என்றால் இன உணர்வில்லாத மொழியுணர்வு உயிரற்ற உடல்போல என்கின்றனர். சிலர் இன உணர்வு என்பது ஆதிக்க, பாசிச உணர்வு பிற இன மக்களுக்கு எதிரான தமிழ் தேசிய பாசிசம் என்கிறார்கள். ஆனால் நான் தமிழன் என்கிறார்கள். எதிர்தரப்போ வெறும் மொழியின் வளத்தை மட்டும் நேசிப்பது இலக்கியத்தை வளர்க்குமே தவிர தமிழின மக்களின் முன்னேற்றத்திற்கோ இன விடுதலைக்கோ ஒற்றுமைக்கோ உதவாது என்கின்றனர். இன உணர்வு பாசிச கலாச்சார காவல் மனோபாவத்துடன் கூடியது பிறமொழி பேசும் மக்களை நசுக்கும் குணம் என்கிறார் அ.மார்க்ஸ் என்னும் முன்னாள் நக்சல்பாரி. இன்னும் சிலரோ "I am டமிழ் speaking Indian" என்கிறார்கள் புத்தக வாக்கியத்தை மறுப்பதிப்பாக வெளியிட்டு, இதுபோன்ற கருத்தும் மொழியுணர்வும் அடிப்படையில்லாத பற்றாகவே தெரிகிறது. இன்னும் சிலரோ நான் தமிழ் பற்றுள்ள சுதந்திரமான "Western Culture"ஐ ஆதரிக்கிறேன் என்கின்றனர். இவர்களெல்லாம் குழப்புகிறார்கள் தமிழ்நாட்டு பொதுமக்களே, ஏதோ ஒரு கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் சிந்திக்க முடியாமல் தவிக்கிறது அல்லது சிந்திக்க மறுக்கிறது அல்லது திரித்து சுயபலன் தேடுகிறது, அல்லது இத்தோடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுகிறது. குறிப்பாக ஒரு கூட்டம் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் பேசாதவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது, இதற்காகவே இந்த திராவிட இயக்கங்களில் சேர்ந்துகொண்டு நாங்களும் தமிழ் பற்றாளர்கள் என்று கதைகட்டிகொண்டு தங்கள் மொழி-இனருக்காக கட்சைகட்டுகிறது. பெரியாரும் அப்படித்தான் நினைத்தாரோ? அதனால்தான் தமிழர் கழகம் என்று வைக்காமல் திராவிடர் கழகம் என்று வைத்தாரோ? திராவிடர் கழகம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தொடங்கப்பட்ட்து என்பது எனக்கும் தெரியும் ஆனால் பிற மாநிலத்தவர்கள் எத்தனை பேர் திராவிட இயக்கத்தில் இருந்தார்கள்? ஆனால் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் திராவிடர் கழகம் பிறமொழி பேசுபவர்களுக்கு புகழிடமாகிவிட்டது. திராவிடர் கழகமும் ஒரு இயக்கமாக இருக்க ஆட்கள் தேவைப்படுகிறதா இல்லையா? பெரியார் தமிழர் மீது அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் தமிழர் கழகம் என்றல்லவா மாற்றியிருக்க வேண்டும். ஊருப்பட்ட வங்கனமும் வெங்காயமும் பேசிய பெரியாருக்கு சமயோசித புத்தியில்லயா? காலம் மாறிய பிறகும் ஏன்யா சுத்தியல் அருவாள் கதிர் அருவாள் ன்னு கம்யூனிஸ்டுகள கேட்ட பெரியாருக்கு யாரும் இதை சொல்லவில்லையா....? இந்த நாத்திகரிடத்துல ஒரு கண்ணா இருக்கனும்னு ஒரு கம்யூனிஸ்டு பாட்டுபாடுதுங்கோ, ஆனா நானும் நாத்திகிதாங்க சாமியோவ்........


பெரியாரின் முட்டாள்தனம் + முரண்பாடுகள்

கள்ளுக்கடையை ஒழிக்கவேண்டும் என்பதற்காக 300, 400 தென்னைமரங்களை வெட்டி சாய்த்து 6 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்தது சாதனையா? ஒரு குற்றமும் செய்யாத தென்னையை வெட்டிய இவர் செயல் உழைப்பு, சிக்கணம், சிந்தனை என இவர் வலியுருத்திய கருத்துக்களையே வெட்டி சாய்த்தது பொல் அல்லவா இருக்கிறது. வேப்பிலை கசக்காமல் போனாலும் போகலாம் ஆனாலும் பார்ப்பானின் ஆதிக்க புத்தி போகாது என்கிறாரே, பார்ப்பனையும் சேர்த்து ஏன் இவர் திருத்தியிருக்ககூடாது. எதிரிகள் இருந்தால்தான் கருத்தா(ஆ)க்கம் செலுத்தமுடியும் என்பதாலா?

மிக விரைவாக பரப்பப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் பெரியார் விரும்பிய கம்யூனிசமோ, சமுதாய விடுதலையோ அடையவே முடியாது. எனவே அரசியல் ரீதியான அனுகுமுறையில் மாற்றமும், நாம் ஒரு கனம் உலக அரசியலை ஒரு முறை ஆராய்ந்து செயல்படவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. பெரியார் ஒரு கட்டத்தில் தான் சமுதாய விடுதலைக்காகவே போராடப்போவதாகவும், தாம் விரும்பிய கம்யூனிச அடிப்படையிலான அரசியல் விடுதலைக்கான முன்னெடுப்பை தற்போதைக்கு மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். இது பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் சிலருக்கு அதிருப்தியாக அமைந்தது. ஆனால் பெரியார் அன்றைக்கு கம்யூனிசத்தை வலியுருத்தி இருந்தால் ஒருவேளை இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என நம்பலாம். ஆனால் பெரியார் கம்யூனிசத்தை கையிலெடுத்தால் தனது விருப்பமான சமுதாய விடுதலை பாதிக்கப்படும் என கருதியிருக்கலாம்.


பெரியாரின் கட்டபஞ்சாய்த்து

இரத்தக்கண்னீர் படத்தில் நடிக்க சம்பளமாக ரூ10000 கேட்டாராம் நடிகர் ராதா, அன்றைக்கு அந்த தொகை அவர் சாதாரனமாக வாங்குவதைவிட பல மடங்கு அதிகமாம். அதையும் முன்கூட்டியே கொடுத்துவிடவேண்டும் என்றாராம் ராதா. ராதா தான் அந்த வேடத்திற்கு பொருத்தமானவர் எனக்கருதிய தயாரிப்பாளர் கேட்டப் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டாராம். படம் எடுக்க ஆரம்பித்த சில காலத்திலேயே ராதா தனக்கு பத்தாயிரம் பத்தாது இருபத்தைந்தாயிரம் வேண்டும் என்றாராம், அதையும் கொடுக்க தயாராயிருந்தாராம் ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் நடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என புரியாத தயாரிப்பாளரை பெரியாரின் பேச்சை ராதா தட்டமாட்டார் என்று கூறி ஒரு தோழர் பெரியாரிடம் அழைத்து சென்றாராம். பெரியரும் விவரத்தை கேட்டுக்கொண்டு நான் ராதாவை நடிக்கச்சொல்கிறேன் ஆனால் அவர் அதிகமாக கேட்ட பதினைந்தாயிரத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்றாராம். அதற்கு ஒப்புகொண்ட தயாரிப்பாளர் பெரியாரிடம் மேலும் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தாயிரமாக கொடுத்தாராம். உடனே ராதாவை அழைத்த பெரியார் பேசியபடி சம்பளம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பது என்ன நியாயம் எந்த பிரச்சனையும் செய்யாமல் குறித்த நேரத்தில் படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டாராம். ராதாவும் மறுத்து பேசாமல் மேலும் பணத்தை பற்றி பேசாமல் இரத்தக்கண்ணீர் படத்தை நடித்து கொடுத்தாராம். பெரியார் செய்தது என்ன கட்டப்பஞ்சாயத்து தானே? இதைதானே திருமாவளவன், கிருஷ்ணசாமி, போண்ற ஆட்களும் செய்கிறார்கள், அவர்களை மட்டும் ஏன் குண்டர் சட்டத்தில் போடுகிறீர்கள், அட அதைத்தானே தளவாய்பாண்டியன், துரைப்பாண்டியன் போண்ற அதிமுக பிணாமிகளும் திருநெல்வேலியில் செய்கிறார்கள். தம்பி படத்தில் வரும் பாண்டியன் அண்ணாச்சியும் கூட, ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்?


மாறிப்பேசும் பெரியார்வாதிகள்!

டி-சர்ட், ஜீன்ஸ் இதெல்லாம் ஒரு துனியா? தமிழர்கள் அணியக்கூடிய உடையா? மரியாதையான தோற்றம் தரக்கூடிய உடைகளா? என்று வினவிய திருவாரூர் தங்கராசு சேர்ந்த பெரியார் கட்சிகாரர்கள் காண்டம் அனிய சொன்ன குஷ்புவிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இப்போது அதே பெரியார்வாதிகள் பெரியார் படத்துடன் கூடிய டி-சர்டுகளை அணிவது சரியா? இது எப்படியிருக்கு?


ஒரு பெண் தன் கணவனல்லாதவன் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாது?

ஒரு பெண் தன் கணவனல்லாதவன் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாது? என்று கூறினாராமே பெரியார்? என்னப்பா இவரு கல்யாணம் கூடாதுங்குறாரு, கட்டிகிட்டாலும் வேற ஆணுடனோ, பெண்ணுடனோ உறவு கொள்வதையும் தண்டிக்ககூடாதுங்குறாரு? இதே பெரியார் சீதையை பஜாரின்னும், சீதைதான் இராவணன் மீது ஆசைகொண்டாள் என்றும் எழுதியிருக்கிறார் தன்னுடைய இராமாயனத்தில். இராமாயணம் பொய், கட்டுக்கதைனு சொன்னவரு எப்படி இப்படி ஒரு புது கதைய சொன்னாரு? இல்ல இராமாயண கதைய புரட்டி இப்படி எழுதனும்னு எழுதுனாரா? புரியலையே. அசிங்கத்த எடுத்து வெளிய போடரோதோட இவர் நிறுத்தியிருக்கலாம், அங்க வெறெதையோ வக்கிற வேலை இவருக்கு எதுக்கு? கல்யாணத்துக்கு பிறகு கூட பிற ஆண்கள் மீது ஆசை கொள்வதை குற்றமாக்ககூடாதுன்னு சொன்ன பெரியார் சீதையை பஜாரி, வேசி ன்னு ஏன் பட்டம் கட்டனும். அப்போ ஜெயலலிதாவ என்னன்னு சொல்றது? சீதைய பஜாரின்னு சொன்ன பெரியார் கட்சி குஷ்புக்கு குடைபிடிக்கிறது ஏன்? மேல் தட்டு மக்களாலும் செல்வ சீமான்களாலும் தாசியாக்கப்பட்ட பெண்களுக்காக வாழ்வுரிமை மாநாடு நடத்தினாரு சரி குஷ்பு எல்லாம் யாரால தாசியாக்கப்பட்டாளோ தெரியல அல்லது இன்னுமும் நவீன தாசிகள் வாழுனும்னு பெரியார் கட்சி நினைக்குதா? அல்லது தாசிகள் பல சாதிகாரர்களோட பழகறதால சீமாண்கள் சாதிய மறந்து சமுத்துவத்த ஏற்படுத்தமுடியும்னு நம்புதா? செல்வ சீமாண்கள் தாசிகளோட இருக்க வரைக்கும் தான் சாதியும் சுத்தமும் பார்க்கிறது இல்லைன்னு பெரியாரே சொல்லியிருக்காரே! சரி அப்படி என்ன குஷ்பு கஞ்சிக்கு வழியில்லாமலா தாசியானாள். அவ சொத்து சேர்க்கத்தானே இது பெரியார் சொன்ன பொதுவுடமை சமுத்துவ கருத்துக்கு எதிரானதில்லையா? வேசி தொழில் மூலமா கோடீஸ்வரியாகி அரசியல்ல புகுந்து நாட்டையே நாசமாக்கின சம்பவங்கள் நம் கண் முன் தானே நடக்கிறது? இதைத்தானே குஷ்புவையும் வைத்து அதிமுக நடதத முயற்சிக்கிறது. போகும் போக்கைப் பார்த்தால் விசயசாந்தி, சிம்ரன், ரோஜா, குஷ்பு, அசின், நயந்தாரா போன்ற வேசிகள்தான் நாடாள்வார்கள் போல் தெரிகிறது. என் பாவாடைக்குள் தேன் தேடப்பிறந்தவனோ என்ற திரைப்படலை ரசித்துக்கொண்டு இரட்டை அர்த்த வசணங்களை ரசிக்கும் வரை தமிழகத்திற்கு நடிகைகள் தான் ஆட்சியாளார்கள். சத்யராஜ் என்ற தமிழ் (பெயர்)? பற்று நடிகர்தான் குஷ்புவின் பெர்மனெண்ட்...............வக்கில்னு சொல்லவந்தங்க. செறுப்பு பிரச்சனைக்கு கூட அவர் தான் வாறாரு. சரி விசயத்துக்கு வருவோம், நாடு இனம் மொழி பற்று கூடாதுன்னு சொன்ன பெரியார் ஏன் தனித்தமிழ்நாடு கோரினார்? ஏன் தமிழ் இனத்திற்காக மட்டும் பேசினார்? இதற்கெல்லாம் பெரியாரிஸ்டுகள் என்ன பதில் சொல்கிறார்கள்? இன்றைக்கு அதே பெரியார்வாதிகளில் சிலர் தமிழ்தேசியம் சாத்தியமல்ல என்கிறார்கள். சிலர் எதிர்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ்தேசியத்தில் பெண்ணுரிமை இல்லை என்பதுதான். அப்படியானால் பெரியார் தமிழ்தேசியத்தை ஏன் பேசினார்? அதிலேயே சில பெரியார்வாதிகள் கூறுவது தமிழ்தேசியம் அமைந்தால்தான் தான் நினைக்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என நம்பினார் என்பதுதான் அந்த விள்க்கம். ஆனால் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் போலி பெண்ணியவாதிகளுக்கு இது புரியவேண்டுமே!


திருமணங்கள் ஒழியவேண்டுமா? பாலியல் ஒழுக்கம் தேவையா?

திருமணங்கள் ஒழிந்தால்தான் பெண்கள் விடுதலை பெறமுடியும், திருமணம் பெண்ணை கட்டாயமாக விருப்பமில்லாதவனோடு வாழ்வேண்டும் என் நிர்பந்திக்கிறது, திருமணம் என்ற அமைப்பே இந்து மதவாதிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறிய பெரியார் பின்னர் கற்பு என்பதே பெண்ணை அடிமைப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது என்று கூறிய பெரியார் கற்பு என்பதை பின்பற்ற விரும்புவோர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதாக கடைபிடிக்கவேண்டும் என்கிறார். அப்போதும் கற்பு என்பதை பின்பற்ற தயாராய் இருப்பவர்களுக்குதான் கூறுகிறார். கற்பு என்பதை பொது ஒழுக்கமாகவோ, சமுதாய நலன் கருதியோ இதை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. சிலர் பொது ஒழுக்கத்தின் அடிப்படையில் கற்பு என்பதை ஏற்றுக்கொள்வதாக பெரியார் கூறியதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. குஷ்புவின் பேச்சால் ஏற்பட்ட சர்ச்சையில் இத்தகைய கருத்துக்கள் வெளிவந்தன. இதற்கும் மேலே போய் பெரியார் திருமணம் செய்துகொண்டபின் தன் கணவனல்லாத, மணைவியல்லாத மற்றவருடன் காதல் உணர்வு ஏற்படுவதும், காம உணர்வு ஏற்படுவதும், உடலுறவு கொள்வதும் தவறில்லை, நீ என் மணைவி என்பதால் மற்றவருடன் காதல்கொள்ளகூடாது என்பதும் உரிமை மறுப்பு அல்லது இயற்கையான உணர்விற்கு எதிரானது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே பெரியார் பழைய காலத்தில் தெய்வங்களை புகழ்ந்து பாடிய சில புலவர்களை இப்படி விமர்சித்து உள்ளார். தொண்டரடிபொடியாழ்வார் என்ற ஒரு புலவர் தெய்வத்திடம் வணங்கும்போது தன் மீது குறிப்பிட்ட அடுத்தவன் மணைவி ஒருத்திக்கு காதல் வரச் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து பாடினாராம். அதை விமர்சிக்கும் பெரியார் இப்படி சொல்கிறார், தொண்டரடிபொடியன் ங்குற சாமியார் ஒருத்தன் அடுத்தவன் பொண்டாட்டிக்கு என்மேல ஆச வரமாதிரி பன்னு சாமின்னு பாடுறான் என்கிறார். அவன் என்ன வேண்டுதல் வைத்தால் இவருக்கு என்ன? இவர்தான் அடுத்தவன் மணைவி மீது ஆசை கொள்வது தவரில்லை என்கிறாரே? சிலர் கணவனல்லாத ஆண் மீது காதல் வரும் சூழ்நிலையில் திருமண உறவை முறித்துக்கொண்டு பிரிந்துவிடவேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற சர்சையான உறவை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் உறவை முறித்துக்கொள்ளுதல் நடைமுறை சாத்தியம். ஆனால் ஒரு ஆணோ, பெண்ணோ சமுதாயத்தின் தூற்றலுக்கு அஞ்சி, பொருளாதார பிரச்சனைகள், குடும்ப சூழ்நிலைக்கு அஞ்சி தனது Extra Marital affairயை மறைத்தாலும் மணசாட்சிக்கு விரோதமாக வாழ நேரிடும். இதனால் தான் நாங்கள் திருமணமே செய்துகொள்வதில்லை என்கின்றனர் சிலர். யாரும் யாரையும் அடிமைபடுத்தவும் தேவையும் இல்லை, சோற்றுக்காக செக்ஸ், காசுக்காக காதல், பணக்காரனுக்குத்தான் பெண் கொடுப்பேன் என்ற மாமா வேலை, வரதட்சனை கொடுத்தால்தான் கல்யாணம் என்ற கல்யாண வியாபாரம், காதல் வியாபாரம் நாங்கள் செய்வதில்லை என்கின்றனர் இந்த திருமண எதிர்ப்பாளர்கள். விருப்பபட்டவர்களோடு சேர்ந்து வாழ தாலி என்ற வேலி எதற்கு ஒத்துவரும் வரை வாழலாம் ஒத்துபோகாவிட்டால் பிரிந்து போகலாம், எனவே Living Together தான் இருவரின் உரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என்கிறார்கள் சிலர். சில்க் சுமிதா கூட இப்படித்தான் வாழ்ந்தார் பிறகு தற்கொலை செய்துகொண்டார் என்று சிலர் போட்டு தாக்குகின்றனர். அரசியல் அரங்கில் இந்த விவாதம் தேவையா என ஆர்க்கூட் நண்பர்கள் கேட்கலாம். இந்த விவாதம் நேரடியாக அரசியல் சம்பந்தப்பட்டதல்ல என்றாலும், ஆரோக்கியமான சமுதாய அமைப்பிற்கு இந்த விவாதம் அவசியமாகிறது.

ஒருவரை திருமணம் செய்துகொண்டு நான் விருப்பப்பட்டவரோடு காதல்கொள்வேன் என்பது எந்த வகையிலும் யோக்கியதையல்ல என்பவர்கள் இந்த உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரிஜினல் கணவனோ, மணைவியோ நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்தால் Adultry என்ற வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆப்பு வைக்கின்றனர் வழக்கிற்காக வாடும் சிலர். வேறொருவருடன் உறவு கொண்டதற்காக 7 வருட தண்டனையா இதென்ன கொலை குற்றமா என்கிறது வேண்டப்பட்ட கூட்டம். இதையெல்லாம் நிரூபிக்கிறது கஷ்டம் அதனாலதான் மறைமுகமாக இப்படி அதிகமா நட்க்குது என்கிறது ஒரு கூட்டம். இது விபச்சாரத்தைவிட மோசமானது என்கிறது பென் ஏன் அடிமையானாள்? குழுமம். ஆனால் விருப்பத்தோடு சப்-இன்சுடன் உடலுறவுகொண்ட ஏட்டு மணைவி, ஏட்டு வீட்டைப்பூட்டிவிட்டு சேலம் கண்கானிப்பாளராக இருந்த பொன்மாணிக்கவேலுவுக்கு தகவல் கொடுக்க, ஏட்டு மணைவி என்னை சப்-இன்ஸ் பலவந்தமாக கற்பழித்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தாளாம். இதுவரை சப்-இன்சுக்கு மாமூல் வசூலித்துக்கொடுத்து தன் மணைவியையே கூட்டிக்கொடுத்து மாமா வேலைப் பார்த்த ஏட்டுக்கும் சப்-இன்சுக்கும் என்ன பிரச்சனையோ, இப்போது கம்பி எண்ணப்போவது சப்ஸ் தான். இதுதான் பங்காளி வீட்டை உறவாடி கெடு என்பதா? மனித உரிமை மாநாட்டிற்கு வந்த தென்னாப்பிரிக்க பெண் நிருபர் அதே நாட்டிலிருந்து வந்த உயர்நீதிமண்ற நீதிபதியுடன் 5 நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே மும்பை காவல் நிலையம் ஒண்றில் கற்பழிப்பு புகார் கொடுக்க நிருபரை பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு நீதிபதியை சிறைக்கு அனுப்பியது காவல்துறை. நீதிபதியிடம் என்ன விவகாரமோ தெரியவில்லை பின்னர் நிருபரே வழக்கை திரும்ப பெற்றார். இப்படி Free Sexற்கு குரல் கொடுப்பவர்கள் கூட சிவகாசி செயலட்சுமி விவகாரத்தில் காவல்துறைக்கு எதிராக சரவெடியாய் வெடித்தார்கள். பிறர் மனை நோக்கா பேராண்மை(பேராண்மை என்றால் என்ன?) வேண்டும் என்ற வள்ளுவர் வழியில் வாழும் தமிழினம் ஒழுக்கமற்ற கலாச்சார சீரழிவிற்கு துனைப்போவதா என்பவர்கள் சொல்லவேண்டும், பெண்கள் பிற ஆண்களை நோக்கலாமா என்று? ஒருவேளை பெண்கள்(மார்டன் கேர்ல்ஸ் உங்களை அல்ல பழையகாலத்து பெண்களை) அப்படி செய்வதில்லை என்று வள்ளுவர் நினைத்திருக்கலாம். அப்படியானால் திருமணமானவர் பிறர்மனை நோக்காமல் கண்ணிப்பெண்களை பார்க்கலாமா? திருமணம் இல்லாமல் விருப்பப்பட்டவரோடு உடலுறவு கொள்ளலாம் குடும்ப வாழ்வு என்பதெல்லாம் அவரவர் விருப்பம் என்பவர்கள் இந்த சுதந்திரமே ஒரு சோசியலிச சமுதாயத்தை நிறுவும் அல்லது உருவாக்கும் என நம்புகின்றனர். சோசியலிசத்தை விரும்பும் தமிழ் உணர்வாளர்களோ இந்த பொறுப்பற்ற கட்டுபாடற்ற உல்லாச வாழ்வு அநாகரீக ஒழுங்கீன சமுதாயத்தை ஏற்படுத்துவதோடு தமிழருக்கான அடையாளத்தை சிதைக்கும் என்று கருதுகின்றனர்.



பெரியார் ஒரு வாழ்க்கை நெறியா?

பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்றொர் புத்தகம். ஆனால் மனம்போன போக்கில் பாலுறவு, திருமணமல்லாத வாழ்க்கை முறை. பிள்ளை வளர்ப்பிற்காக பெற்றோர் வாழ்க்கை சுகங்களை இழக்ககூடாது போன்ற எண்ணற்ற குடும்ப அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு வாழ்க்கை நெறியா? ஏதோ வயித்த கட்டி வாயக்கட்டி பெற்றோர்கள் படிக்க வைத்த காரணத்தால் தான் பார்ப்பணர்களை வியக்க வைக்கும் அளவிற்கு பல தலைவர்களும், திறமைசாலிகளும் கிரமத்திலிருந்தும் வந்துள்ளனர். பெரியார் பொதுவுடமை, சோசியலிச சமுதாயத்தை விரும்பினார் நேர்மையான, ஊழலற்ற பொது வாழ்வை ஊக்கப்படுத்தவும், அறியாமையை நீக்கி, ஆதிக்கத்தை எதிர்த்து, உரிமைகளை மீட்க புறப்பட்ட ஓர் புரட்சியாளர் தான் பெரியார். ஆனால் கடவுளைப்போல, மதத்தைப்போல, சடங்குகளைப்போல குடும்பத்தையும் ஓர் மூடநம்பிக்கையாக பெரியார் கருதிவிட்டார் போல் தெரிகிறது. சமுதாயத்தைப்போல குடும்ப அமைப்பிலும் உரிமை பிரச்சனைகள், அறியாமை இருப்பதென்னவோ உண்மையானாலும், இந்த சிக்கலை அனுகும் முறையிலே மாற்றம் தேவை. அன்று குடும்பத்தில் நிலவிய நேர்மையும், அன்பும், அக்கறையும் குறைய என்ன காரணம்? சமுதாய மாற்றம் பின்னோக்கி போகிறது அதிகபடியான ஊழல், சுயநலத்திற்காக அரசியல் என பொதுவாழ்வு சீர்கெட்டுபோகிறதே ஏன் இந்த நிலை? குடும்ப கட்டுபாடுகள் உடைக்கப்பட்டு அறிவார்ந்த சமூகம் தனி மனித வளர்ச்சி குடும்ப அமைப்பை கேள்விக்குறியாக்கி இளைய சமுதாயம் வழி தவறிப்போகும் அபாயம் பெருகி வருகிறது. பொலியான கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு இளைய சமுதாயத்தின் அறிவும் வளர்ச்சியும் சீரழிக்கப்படுவதற்கு காரணம் பெற்றோர்-பிள்ளைகள் புரிதல் இல்லாமையும், பொழுதுபோக்கு அம்சங்களின் படையெடுப்பும்தான். இதை சரிபடுத்த இன்னொரு பெரியார்தான் வரவேண்டுமா? பெரியார்வாதிகள் என்ன செய்கிறார்கள்? பெரியார் சொத்தில் சுகமாக வாழ்ந்து, இயக்க பணத்தில் இன்னோவா கார் வைத்துக்கொண்டு, மானமிகு, தமிழர் தலைவர் என்று அடைமொழிகளை சேர்த்துக்கொண்டும், வெளிநாடுகளில் பட்டம் வாங்கிகொண்டும் சுகமாக கார் ஏறி மெமோரியல் ஹால் சென்று தனது ஜால்றாக்களில் பத்து பேரை வைத்துக்கொண்டு வாரமொரு போராட்டம் நடத்திவிட்டு திடலிலேயே குந்திகொண்டு வரவு செலவு கணக்கு பர்ப்பதும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதும் தானே? அட வாழும் பெரியார் தானே இந்த பொழுதுபோக்கு பிதற்றல்களின் அதிபதியே. இவரை ஒழியுங்கள் முதலில், நடிகைகளின் அரைகுறை ஆட்டம் பார்ப்பது, மக்களுக்கு டிவி கொடுப்பது, சன் டிவிக்கு எதிராக கலைஞர் டிவி ஆரம்பித்து, திருவாளர் திருமதிக்கு எதிராக அங்கே ஒரு ஆட்டம், அங்கே நடக்கும் எதர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் போட்டிபோட்டுக்கொண்டு சமூகத்தை சீரழிப்பவர்களா பெரியாரிஸ்டுகள்?

பெரியாரின் கருத்துக்கள் மீது மீண்டும் ஒரு விவாதம் தேவை, இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாரு பெரியாரின் கருத்துக்களை மாற்றியமைத்து நாளைய சந்ததிக்கு நல்வழி காட்டினால் ஒழிய பெரியாரின் கருத்துக்கள் நிலைக்காது. பெரியாரின் மூலப்ப்டிவத்தில் கைவைக்காமல் புதியதோர் புத்தகத்தை இன்றைய சமுதாயத்திற்கு ஒர் வாழ்க்கை நெறியை வகுக்கவேண்டும்.




No comments: